தமிழகத்தில் குறையும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.இதேவேளை, சென்னையில் 24 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,365 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,410 பேருக்கு கொரோனா உறுதியானதெனக் கூறப்பட்டு உள்ளது.