’தமிழர்களைப் பற்றி சிந்திப்பது இலங்கைக்கு நல்லது’

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதானது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கும் இது பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில், அமைச்சர் திணேஸ் குணவர்தனவுடனான இன்றைய சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென் கொரியக் கப்பலைக் கைப்பற்றிய ஈரான்

வளைகுடா கடற்பரப்பில் தென் கொரியக் கொடியொன்றையுட்டைய கப்பலொன்றை ஈரானின் புரட்சிகர காவலர் படைகள் கைப்பற்றியுள்ளதாகவும், அதன் சிப்பந்திகள் குழாமைக் கைது செய்துள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.

3772 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேர் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது…..

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும்

(என்.கே. அஷோக்பரன்)

யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

உக்ரேன் பயணிகளுக்கும் கதவுகள் மூடப்பட்டன

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உக்ரேன் சுற்றுலாப் பயணிகளின் சீகிரியா மற்றும் பொலன்னறுவைக்கான சுற்றுலா பயணங்கள் அவசரமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், இன்று (04) உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட பட்டானிக்சூர்

வவுனியாவில், முடக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், வவுனியா நகரிலுள்ள தங்களது வர்த்தக நிலையங்களைத் திறந்து வைத்துள்ளமையால், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

தோழர் சி.தருமராசன் காமானார்!

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கல்லுவத்தை வாழ்விடமாகவும், தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழரும், தொழிற்சங்கவாதியுமான தோழர் சின்னத்துரை தருமராசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தோழர் தருமராசன் மறைவுக்கு செங்கொடியைத் தாழ்த்தி புரட்சிகர அஞ்சலி செய்வதுடன், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனதும் என குடும்பத்தினதும் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்