கன்னியாஸ்திரீ வழக்கு; பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரீயும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

கெடும் முன்னரே, இணையவழியில் ‘விழி’ப்பாய் இருப்​போம்

ஒன்றை இழந்துவிட்டு, பரிகாரங்களைத் தேடி அலைவதை விட, நல்லது, கெட்டதை அறிந்து, வகை பிரித்துக் கையாள்வது யதார்த்தத்துக்கு உசிதமாய் அமையும். ஏனெனில், கொவிட்-19 நோய் தொண்டைக்குழியை மூடி, உயிரைப் பறிப்பது மட்டுமன்றி, கண் பார்வையையும் பறிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டங்கியில்…

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பாய்கின்றமையால், அவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்ந்தும் மழை; மட்டு., அம்பாறையில் 10,840 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,840 குடும்பங்களைச் சேர்ந்த 36,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் ஆடுகிறது கொரோனா, ஐவர் தனிமை

ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் உட்பட ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட ஐந்து பேர், இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய கப்பல் சேவைக் குறித்து ஆய்வு

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் காரைக்காலுக்கிடையே கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பில் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயமொன்றை இன்று மேற்கொண்டிருந்தனர். இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

’புதியவகைக் கொரோனா நாடுமுழுவதிலும் பரவியுள்ளது’

புதியவகைக் கொரோனா வைரஸ் பிரித்தானிய முழுவதும் பரவியுள்ளதாக அந்நாட்டின் தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் நீல் பெர்கசன் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலானோருக்கு அல்லது முழு ஐரோப்பாவுக்கும் புதியவகைக் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறைந்த தொற்றாளர்களைக் கொண்ட டென்மார்க்கிலும் இந்த கொரோனா இனங்காணப்பட்டிருப்பதாகவும், இது ஐரோப்பா முழுவதிலும் பரவியிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் போராடிய 33 விவசாயிகள் இறப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய்த் திறக்காதது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நேபாள நாடாளுமன்ற கலைப்பைக் கோரியுள்ள அமைச்சரவை

அவசரநிலை சந்திப்பொன்றில் நாடாளுமன்றத்தை கலைக்க நேபாள அமைச்சரவை இன்று பரிந்துரைத்துள்ளது. பெரும்பான்மை ஆதரவை பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி இழந்து விட்டதாக அவரின் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்த நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டுப்பற்று எனும் ‘முகமூடி’

(என்.கே. அஷோக்பரன்)

பிரித்தானிய அறிஞர் சாமுவல் ஜோன்ஸன், “நாட்டுப்பற்று (patriotism) என்பது, அயோக்கியர்களின் கடைசிச் சரணாலயம்” என்று, 1775இல் தெரிவித்திருந்தார். இப்படிச் சொன்னதன் மூலம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களை ஜோன்ஸன் குறை சொல்லவில்லை. மாறாக, நாட்டுப்பற்று எனும் முகமூடியைப் பயன்படுத்தும், ‘பசுத்தோல் போர்த்திய நரிகளையே’ அவர் கடிந்துகொண்டார்.