இலங்கை – இந்திய கப்பல் சேவைக் குறித்து ஆய்வு

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் காரைக்காலுக்கிடையே கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பில் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயமொன்றை இன்று மேற்கொண்டிருந்தனர். இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.