மாலைத்தீவில் இருந்து 177பேர் மத்தல வருகை

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி கூட்டமைப்புடன் கைகோர்த்தது

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.

இழந்தவைகள் இழந்தவைகளாகட்டும் இருப்பவைகளையாவது பாதுகாப்போம்

(காரை துர்க்கா)

தற்போது மக்கள், கொரோனா வைரஸுடன் வாழப் பழகி விட்டார்கள். இது கூட, உலக நியதியே ஆகும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கலாம் என, ஆபத்துக்குள் வாழ்ந்தாலும் வழமையான நிலையில், வாழ்வதாகவே கணிசமான மக்கள் உணர்கின்றார்கள்.

‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’

(என்.கே. அஷோக்பரன்)

“வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்பார் ஃப்ரெஞ்ச் அறிஞர் வோல்டேயர். வரலாறு என்பது எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்துகொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறுதான். ஆனால், கடந்த காலத்தில் என்னதான் நடந்தது என்பதை, இப்போது நாம் எப்படி அறிந்துகொள்வது? அந்த வகையில் பார்த்தால், வரலாறு என்பது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இன்று எமக்கு கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும் பதிவுகளின் தொகுப்பு மட்டும்தான் அல்லது அந்தப் பதிவுகளுக்கு நாம் வழங்கும் பொருள்கோடல்களும் வியாக்கியானங்களும்தான். அந்தப் பதிவுகளினூடாகவும் அவற்றுக்கு வழங்கும் பொருள்கோடல், வியாக்கியானங்களூடாக கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் வரலாறு எனலாம்.

மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்?

(எம். காசிநாதன்)

“மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ, “தலைவர்கள் தேவை” என்று விளம்பரம் மேற்கொண்டாலும், யாரும் கிடைக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பல “அறிவாளி” தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். தைரியமிக்க தலைவராகவும் மதிநுட்பம் மிகுந்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை முன்வைத்து “ நேருவின்” அமைச்சரவைக்குள் ஒரு மாற்றுத் தலைவர் போல் அவர் இருந்தார். ஆனால், காலப்போக்கில் நேருவின் கரமே வலுப்பெற்று, காங்கிரஸ் கட்சியின் “நம்பிக்கை நட்சத்திரமானார்” நேரு. அவரது மறைவு வரை, நேருவுக்கு மாற்றாக இந்திய அரசியலில் ஒரு “முக்கியமான மாற்றுத் தலைவர்” உருவாகவில்லை!

‘மன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது’

இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக மன்னார் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாதெனவும் இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதி வழங்க வேண்டாமெனவும், கடற்படை அதிகாரியிடம் மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்தியாவையும் சீனாவையும் யுத்தத்திற்குள் தள்ளும் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்

அமெரிக்காவும் கனடாவும் 8993 கிமீ நீளமான உலகின் மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களின் மூலம் இரு நாடுகளும் சுமூகமாக தமது எல்லையை காலத்திற்காலம் நிர்ணயம் செய்து கொண்டன. இதனால் இரு நாட்டு மக்களும் எதுவித எல்லைப் பதற்றமுமின்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவரும், தேடப்பட்டு வரும் நபரான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேரையும் தேசிய விசாரணை முகமை (என்ஐ) இன்று கைது செய்தது.

கரோனா காலம்: துயரத்தை மட்டுமே சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்

கரோனா காலத்தில் நாம் நலமாக இருப்பதற்காக நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிர்மறைப் பதிலைத்தான் பெரும்பாலும் பெற முடிகிறது. சென்னை போன்ற பெருநகரில் சுகாதாரக் களப்பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் பலர் பணிக்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.