(ப. தெய்வீகன்)
கடந்த இரண்டு வாரங்களாகவே முஸ்லிம் மக்களின் வீடுகள், மசூதிகள் போன்றவற்றில் சிறிலங்கா பொலீஸாராலும் சிறப்பு படையினராலும் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கத்திகள் மற்றும் வாள்களைவிடவும் கூரான ஆயுதங்களோடு அந்த தம்பிமார் வீதி வீதியாக கத்தியபடி வருகிறார்கள். கடைகளின் மீது கற்களை வீசியெறிந்து உடைந்து நொருங்கும் கண்ணாடி சத்தங்களில் ஆனந்தம் கொள்கிறார்கள். மேலும் மேலும் சத்தமிட்டவாறு கையில் கிடப்பவற்றையெல்லாம் வீசியெறிந்து இயன்றளவு சேதம் செய்கிறார்கள். வீடு வீடாகவும் வீதி வீதியாகவும் கால் நடையாகவும் வாகனங்களிலும் சென்று கண்டதையும் உடைக்கிறார்கள். தீயிட்டு கொழுத்துகிறார்கள். கடைகள், மசூதிகள், வீடுகள் எல்லாம் ஒங்கிய ஒளிப்பிழம்புகளாக இரவெல்லாம் எரிந்துகொண்டிருந்தன.
‘கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த, துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்’
‘நிலைமையைக் கட்டுப்படுத்த, முழு அதிகாரமும் பயன்படுத்தப்படும்’
48 மணி நரேஙரகளில் 30 முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல், 9 பள்ளிவாயல்கள் சேதம்
கருப்பையா ராஜேந்திரனிடம் வாக்குமூலம் பெற நீதவான் அனுமதி
தற்கொலைக் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று (13) பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார். கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா இந்த வெடிப்புச் சம்பவத்தின் 10ஆவது சந்தேகநபரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்கா, ஹபாயா வேண்டாமென எதிர்ப்பு
மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு
யாரு கண்ணுபட்டுப் போனதோ….? அந்த மாதிரி இருந்த ஊரு இந்த மாதிரிப் போனதே…..?
(சாகரன்)
2009 ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுற்று சில வருடங்களில் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என்றும் தமிழர் பிரதேசம் எங்கும் கட்டுமானங்கள் நடைபெற்றன. இலங்கையின் ஏனைய பாகங்களுடன் தமிழ் பிரதேசங்கள் வேக வழிச்சாலைகள் உருவாக்கப்பட்டன. பின்பு படிப்படியாக வீதித் தடைச் சோதனைகளும் அகற்றப்பட்டன. புலம் பெயர் தேசத்து உறவுகள் தாயகம் திரும்பி தமது ஊர்களுக்கு சென்று தாம் நிரந்தரமாக தங்கிவிடும் புலம் பெயர் தேசத்திற்கு திரும்பி வந்ததும் ஊர் எப்படி இருக்கின்றது என்றதற்கு ‘….அந்த மாதிரி இருக்குது ஊர்…” என்று கூவி மகிழ்ந்ததற்குள் இந்த பெரும் தெரு வேக இணைப்புகளும் மக்களின் அன்றாட தேவைகளுக்கான அபிவிருத்திகளும் தங்கு தடையற்ற வடக்கு கிழக்கிற்கு அப்பால் தெற்கிற்கும் பயணம் செய்து இடங்களைப் பார்த்து வருவதற்கும் உரிய இயல்பு நிலையொன்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகளே ஒழித்திருந்தன.
தடை செய்யப்பட்ட ஆடையுடன் வருகைதந்தவர்கள் கைது
தடை செய்யபட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் – ஜயபிம பிரதேசத்தில் வைத்து இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர் முகத்தை முழுவதுமாக மறைத்தவாறு தனது கணவருடன் வருகைதந்துள்ளார்.