மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாபிட்டி – பிங்கிரிய – தும்மலசூரிய – ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் நாளை (14) அதிகாலை 4 மணிவரை, பொலிஸ் ஊரடங்கு சட்டம்பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஸ்னாயகபுர, கொபெய்கனே ஆகிய பிரதேசங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படுமெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக, இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.