(எம். காசிநாதன்)
“காங்கிரஸ் கட்சியுடன், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்திருப்பது, மத்திய அரசாங்கத்தில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான, அகில இந்தியக் கூட்டணி அமைவதற்கு, நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்திய அரசியலில் மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்றோர் எடுக்கும் முடிவுகள், அகில இந்திய அரசியலில் ‘வானவெடிகளை’ கடந்த காலத்தில் ஏற்படுத்தியிருந்தது.