நாபாவை நேசித்த சிங்களத்தின் ஜோ செனிவரத்ன தோழர் நினைவாக!?

எம்மை நாம் இலங்கையர் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்ய எத்தனையோ இனக்கலவரங்கள் ஏற்ப்படுத்தப்பட்டு ஈழம் தான் முடிந்த முடிவு என நாம் முடிவெடுத்த வேளையில் அது தவறு ஒட்டுமொத்த அடக்குமுறமைக்கு எதிராகா நாம் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனையில் சிங்கள முற்ப்போக்கு சிந்தனையாளரை தன் வசம் ஈர்த்தவர் நாபா.

(“நாபாவை நேசித்த சிங்களத்தின் ஜோ செனிவரத்ன தோழர் நினைவாக!?” தொடர்ந்து வாசிக்க…)

மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு

உங்களது வெல்லும் தமிழீழம் மாநாடு பற்றிய விளம்பரம் பார்த்தேன். பிரமிக்க வைத்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் இயக்கமும் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் இடைவிடாது போராடி வருகிறீர்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்காக உங்களது கரிசனை எம்மைப் புல்லரிக்கச் செய்கிறது.

(“மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு” தொடர்ந்து வாசிக்க…)

போய் வாருங்கள் ஜோ!….

இலங்கையில் தோழர் வரதராஜபெருமாள் தலைமையில் அமைந்த வடகிழக்கு மாகாண அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் தோழர் ஜோ செனவிரத்ன. இவர் பிறப்பால் சிங்களவர். எண்ணத்தால் ஒரு சர்வதேசியவாதி. இடதுசாரிக் கொள்கைகளில்
நாட்டம் பெற்று தொழிற்சங்க இயக்கத்தில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னாளில் பத்மநாபா தலைமையிலான  ஈபிஆர்எல்எப் இயக்கத்துடன் இணைந்து
தீவிர அரசியல் செயல்பாடுகளில் களம் கண்டவர். இவர் ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. ஓஷோ குறித்த இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள்.
(“போய் வாருங்கள் ஜோ!….” தொடர்ந்து வாசிக்க…)

ஜோ!

(தோழர் சேகர் – பாஸ்கரன்)

சுடரும் தீப்பந்தமாய் எழுந்து, தன் புரட்சிப் பணியை முடிந்தவரை முன்னெடுத்துப், பல உள்ளங்களில் சிந்தனைச் சுடரேற்றிவிட்டு, காலச் சக்கரத்தின் சுழற்சின் தவிர்க்கமுடியாத இயற்கை விதியோடு இணைந்து நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்ட அன்புத் தோழன் ஜோவுக்கு இதயம் கனிந்த நன்றியறிதலோடு பிரியாவிடையளிப்போம் தோழர்களே!

(“ஜோ!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்

தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளிகளில் ஒருவரான மந்துவிலைச் சேர்ந்த இரத்தினம் அவர்கள் சக நண்பனான பனியன் ராசன் என்பவனால் நயவஞ்சகமாக எதிரிகளின் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று. 18/02/ 1968 இல் கொல்லப்பட்டார்.1935 ஆம் ஆண்டு பிறந்த அவர் முப்பத்து மூன்றாவது வயதில் கொல்லப்பட்டார். இன்று அவரது ஐம்பதாவது நினைவு தினம். (“தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்” தொடர்ந்து வாசிக்க…)

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

(கே. சஞ்சயன்)

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி.
ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன.

(“சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?” தொடர்ந்து வாசிக்க…)

‘தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன்’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அரசமைப்பின் பிரகாரம் தொடர்ந்து பிரதமராக, தான் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கருத்தில்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அலரி​மாளிகையில் முதன்முதலாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன்’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்

(மொஹமட் பாதுஷா)

இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்குப் பின்னர், ஒருபோதும் ஏற்பட்டிராத அரசியல் நெருக்கடிநிலை, இம்முறை ஏற்பட்டிருக்கின்றது. ‘குட்டி இராஜாங்கத்துக்கான தேர்தல்’ நாட்டின் ஒட்டுமொத்தமான ‘பெரிய அரசாங்கத்தின்’ அடித்தளங்களிலும் அதிர்வுகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் எது நடந்துவிடும் என்று எண்ணி, தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அஞ்சியதோ, அதைவிடவும் பாரதூரமான சிக்கல்கள் தலைதூக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

(“தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

19 பிப்ரவரி: எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

19 பிப்ரவரி என் அத்தை எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

என் அத்தையை நினைவு கூற எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

என்.எஸ்.கிருஷ்ணன் காலம் தொட்டு திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, இருவரும் எதிர் எதிரே ஒருநடிகர் கூட்டத்தை வைத்திருந்து படங்களில் நடித்து வந்த காலத்திலேயே, இருவர் படங்களிலும் நடித்து வந்தவர்.

(“19 பிப்ரவரி: எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!” தொடர்ந்து வாசிக்க…)