தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்

தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளிகளில் ஒருவரான மந்துவிலைச் சேர்ந்த இரத்தினம் அவர்கள் சக நண்பனான பனியன் ராசன் என்பவனால் நயவஞ்சகமாக எதிரிகளின் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று. 18/02/ 1968 இல் கொல்லப்பட்டார்.1935 ஆம் ஆண்டு பிறந்த அவர் முப்பத்து மூன்றாவது வயதில் கொல்லப்பட்டார். இன்று அவரது ஐம்பதாவது நினைவு தினம். (“தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்” தொடர்ந்து வாசிக்க…)

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

(கே. சஞ்சயன்)

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி.
ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன.

(“சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?” தொடர்ந்து வாசிக்க…)

‘தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன்’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அரசமைப்பின் பிரகாரம் தொடர்ந்து பிரதமராக, தான் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கருத்தில்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அலரி​மாளிகையில் முதன்முதலாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன்’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்

(மொஹமட் பாதுஷா)

இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்குப் பின்னர், ஒருபோதும் ஏற்பட்டிராத அரசியல் நெருக்கடிநிலை, இம்முறை ஏற்பட்டிருக்கின்றது. ‘குட்டி இராஜாங்கத்துக்கான தேர்தல்’ நாட்டின் ஒட்டுமொத்தமான ‘பெரிய அரசாங்கத்தின்’ அடித்தளங்களிலும் அதிர்வுகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் எது நடந்துவிடும் என்று எண்ணி, தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அஞ்சியதோ, அதைவிடவும் பாரதூரமான சிக்கல்கள் தலைதூக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

(“தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

19 பிப்ரவரி: எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

19 பிப்ரவரி என் அத்தை எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

என் அத்தையை நினைவு கூற எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

என்.எஸ்.கிருஷ்ணன் காலம் தொட்டு திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, இருவரும் எதிர் எதிரே ஒருநடிகர் கூட்டத்தை வைத்திருந்து படங்களில் நடித்து வந்த காலத்திலேயே, இருவர் படங்களிலும் நடித்து வந்தவர்.

(“19 பிப்ரவரி: எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஜோ செனிவிரட்ணா மறைவு

(தோழர் ஜேம்ஸ்)

ஐம்பது ஆண்டுகள் இலங்கையின் சமூகபொருளாதார மறுமலர்ச்சிக்கும் ஜனநயாகம் மனித உரிமைகளுக்குமான இடையறாத சளையாத போராட்டக்காரரும் ஊடகவியலாளாரும் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையில் அங்கத்தவரும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்கு இடையறாது செயற்பட்டவரும் முற்போக்கு இயக்க பாரம்பரியத்தை சேர்ந்தவரும் தொழிற்சங்கவாதியும் “விகல்பகண்டயம” மாற்று அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரும் எம்முடன் ஒரு நீண்ட பயணத்தை நடத்தியவருமான தோழர் ஜோ மறைவு.தயான் ஜயத்திலகா இற்கு பின்பு இவர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் ஆக செயற்பட்டார்.

(“தோழர் ஜோ செனிவிரட்ணா மறைவு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்

(க. அகரன்)

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன.

(“தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலில் யார் தோற்றார்கள்?

(Gopikrishna Kanagalingam)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது.

(“தேர்தலில் யார் தோற்றார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

புதிய பிரதமர்; புதிய அரசாங்கம்?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இவ்வரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

(“புதிய பிரதமர்; புதிய அரசாங்கம்?” தொடர்ந்து வாசிக்க…)