இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்

(முகம்மது தம்பி மரைக்கார்)

‘எனது தந்தையுடன் 1960ஆம் ஆண்டு குடும்பமாக இந்தக் கிராமத்துக்கு வந்தோம். அப்போது இந்தப் பிரதேசம் காடாக இருந்தது. காடுகளை வெட்டி, இங்கு குடியேறினோம். அப்போது வெள்ளைக்குட்டி என்கிற முகம்மது இஸ்மாயிலும் அவரின் மூன்று சகோதரர்களும் இப்றாலெப்பை என்பவரும் மட்டுமே இங்கு எங்களைப்போல் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு 10 வயதாக இருந்தது’.

(“இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தர் எதிர்வுகூறல் முழுமை பெற கால நீடிப்பு தேவை!

2016ல் தீர்வு கிடைக்கும் என்று, புதிய நல்லாட்சி அரசு அமைந்த உடன் தன் எதிர்பார்ப்பை, சம்மந்தர் வெளியிட்டார். அது ஒன்றும் சாத்திர நம்பிக்கை அல்ல. சந்திரிகா ரணில் மைத்திரி மீது அவர் வைத்த அனுபவ முதிர்ச்சி. பிரபாகரன் இருக்கும்வரை அவர் ஏற்காத எதனையும் ஆதரிக்கும் நிலை எவருக்கும் இருக்கவில்லை. அதனால் தான் சந்திரிகா அம்மையார் காலத்து தீர்வு திட்டத்தை, ஆதரிக்க முடியாத இருதலை கொள்ளி எறும்பு நிலையில், சம்மந்தர் இருந்தார்.

(“சம்மந்தர் எதிர்வுகூறல் முழுமை பெற கால நீடிப்பு தேவை!” தொடர்ந்து வாசிக்க…)

புலி ஆதரவாளர்கள் தயவு செய்து இதை கண்டிப்பாக படிக்கவும்

குறிப்பாக hounslow boys (மன்னிக்கவும் உங்கள் பெயரை hounslow ladies என்று மாற்றினால் தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்)
30/ 03/ 87 அப்படி என்னதான் நடந்தது,ஒன்றும் இல்லை புலிகள் சக போராளிகளை டயர் போட்டு கொளுத்தி பார்த்தார்கள், கொஞ்சப்பேரை சுட்டுப்பர்த்தர்கள்.

(“புலி ஆதரவாளர்கள் தயவு செய்து இதை கண்டிப்பாக படிக்கவும்” தொடர்ந்து வாசிக்க…)

மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?

ஜெயலலிதாவை ஒரு பெண் சாதனையாளராக, எல்லாப் பெண்களுக்குமான ஒரு பெண்ணுரிமைப் போராளியாகப் போற்ற முடியுமா?

மனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே மரணம் தந்த அச்சமே இப்போது தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீது கட்டமைக்கப்படும் புனித பிம்பத்திற்கு காரணம்.

(“மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?” தொடர்ந்து வாசிக்க…)

‘அம்மா’ ஜெயலலிதா என்ற ஆளுமையின் உள் பக்கங்கள்

 
(புகைப்படம் சிறுவயது ‘அம்மு’ ஜெயலலிதாவும் அவர் தாய் நடிகை சந்தியாவும்)
 
ஜெயலலிதாவின் மரணத்தால் வெற்றிடம் ஏற்படவில்லை அது வேறிடம் இற்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த ஆளுமையை சரியான திசை வழியில் இவர் பயன்படுத்தாமல் வேறு சிலரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாரோ என்ற கேள்விகள் என்னிடம் நீண்டகாலமாக உள்ளது. பிராமணிய ஆசாரத்தில் பிறந்து சிறுவயதில் தந்தையை இழந்து இதன்பின்பு நடிகையான தாயின் அரவணைப்பில் வாழ்ந்தவர். 1960 காலங்களில் தனது தாயாரின் மீது (தமிழ்) திரையுலக ஆண் வக்கிரங்களின் துன்பங்களை இவரின் பிஞ்சு மனத்தில் காயங்களை எற்படுத்தியிருக்கலாம்…? இதனைத் தொடர்ந்து தனக்கும் திரையுலகத்திலும் வெளியிலும் ஏற்பட்ட சொந்த அனுபவங்களால்…. தகப்பன் ஸ்தானாத்தில் இருந்த எம்.ஜி.ஆர் இனால் ஏற்படுத்தப்பட்ட ‘வைச்சுக்கிறேன்’ என்ற உறவும்… அரசியல் பொதுவாழ்வில் எம்ஜிஆர் இன் மறவை ஒட்டிய அவமானங்களும்…. இதன் உச்சமான சட்டசபை துயில் உரிவும் இவரின் பிஞ்சுமனத்தில் ஏற்பட்ட உளவியல் தாகத்தை மேலும் ஒரு உச்ச நிலைக்கத் தள்ளிச் சென்றிருக்கின்றது.

(“‘அம்மா’ ஜெயலலிதா என்ற ஆளுமையின் உள் பக்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? – காய் நகர்த்தும் தலைவர்கள்

(எம்.சரவணன்)
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை வசப்படுத்த காங்கிரஸும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

(“அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? – காய் நகர்த்தும் தலைவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதாவைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து, பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை தனது அதிகாரபூர்வ வலைப்பூ பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் ஜெயலலிதாவின் திடீர் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

(“ஜெயலலிதாவைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது.

(“மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்” தொடர்ந்து வாசிக்க…)

அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள்…: ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி ஆகிய சசிகலா..!

(இரா.சரவணன்)
ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த நாளில் அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. அந்த இறுக்கமான தருணத்தில் அப்போலோவில் இருந்த கட்சிப் பிரமுகர்கள், சசிகலா தரப்பினர், அதிகாரிகள், கார்டன் உதவியாளர்கள் எனப் பலரிடமும் பேசியதில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இதோ:

(“அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள்…: ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி ஆகிய சசிகலா..!” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டு துருவ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்தன!

தமிழ் நாட்டின் இரண்டு ஆளுமை உள்ளவர்களின் அடுத்தடுத்த மறைவு பலரை, நடுக்கடலில் துருவ நட்சத்திரம் கொண்டு திசையறிபவர்கள், அது மறைந்தால் படும் இன்னல் போன்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டது. தமிழகத்தின் முதல்வர், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவி, அம்மா என அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா அம்மையார் மறைவும், துக்ளக் ஆசிரியர், பன்முக தன்மைகொண்ட அரசியல் விமர்சகர், பிரதமர் நரேந்திர மோடியால் ராஜகுரு என அழைக்கப்பட்ட சோ ராமசாமி அவர்களின் மறைவும் ஈடுசெய்ய முடியாதவை.

(“இரண்டு துருவ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்தன!” தொடர்ந்து வாசிக்க…)