(தோழர் மோகன்)
தனிநபர் தலைமைக்குப் பதிலாக கூட்டுத்தலைமை, இயக்கத்திற்குள் ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் பிணக்குகளுக்குத் தீர்வு காணுதல், சகோதரப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு, இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை, இனங்களுக்கிடையே ஐக்கியம், அமைப்புக்களுக்கும் தனி நபர்களுக்கும் பேசவும் எழுதவும் ஒன்றுகூடவும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பேணுதல், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், இயக்கங்களின் தவறான போக்குகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதித்தல் என்பவற்றை வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்ததுடன் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசிய, உழைக்கும் மக்களின், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பாட்டாளிவர்க்கத் தலைமையை கட்டியெழுப்ப முயன்ற ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு 13.12.1986 அன்று புலிகள் தடை விதித்தனர்.
நாளை முதல் ‘மேட் இன் ஸ்ரீ லங்கா’
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சந்தைவாய்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் விசேட வேலைத்திட்டமொன்று நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இதிலிருந்து உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும் என, கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
19 வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்
ஜனாஸாக்கள் விவகாரம்; ஆராய்வதாக மாலைத்தீவு அறிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விலக்கும் வகையில் பேரணி
சிறுபான்மையினரை அடக்கியாளுதல்
கட்டாயத் தகனம் இடைநிறுத்தம்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிஐஜி இராஜினாமா?
தேர்தல் முடிவை மாற்றுவதை முடிவுக்கு கொண்டு வந்த உச்ச நீதிமன்றம்
நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும் டெக்ஸாஸின், ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஆதரவளிக்கப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. அந்தவகையில், நாளை மறுதினம் சந்திக்கவுள்ள தேர்தல் பிரதிநிதிகள், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனை உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.