விவசாயிகள் போராட்டத்துக்கு நியாயமான தீர்வு காணும் வகையில் நீதிமன்றம் சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதால், புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை யோசனை தெரிவித்தது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றி!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.2015 இல் 07 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றிருந்த இடது ஜனநாயக முன்னணி இம்முறை நடந்த தேர்தலில் 11 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றுள்ளது.
வடக்கு சந்தைகளுக்கு பூட்டு
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மேலும் 312 பேருக்குக் கொரோனா….701 பேர் குணமடைந்துள்ளனர்.
வெள்ளவத்தை-நபீர்வத்த முடக்கம்
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபீர்வத்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தனிமைப்படுத்தல் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.