இலங்கையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான பயிற்சி கூடமாகவும் இருந்த, பயிற்சி முகாமொன்று, விசேட அதிரடிப்படையினரால், மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டது. மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்தமுகாம் முற்றுகையிடப்பட்டது. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அப்துல் ரவூப் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுக்கு ஓர் ஆலோசனை:
இலங்கையில்காட்சிகள்வேகமாகமாறுகின்றன
பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும்
(ஏகலைவா)
அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
ஒரே நாளில் பல தாக்குதல்கள் திட்டம்; வெற்றியளிக்காமைக்கான காரணம் வெளியானது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான்….?
(Annam Sinthu Jeevamuraly)
காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான் என்ற அறிவுறுத்தல் தோறணையில், முகநூலில் விவாதங்கள் கிளப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே யாழில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் சும்மா கடந்து செல்லுமாறு , தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னான விவாதங்கள் வலியுறுருத்துக்கின்றன.
34 வது நினைவாஞ்சலி
03.05.1985ம் ஆண்டு EPRLF இன் இரானுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படை(PLA) யினால் மேற்கொள்ளப்பட்ட காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் வீரகாவியடைந்த
தோழர் சின்னவன்(கந்தளாய்), தோழர் கணேஷ் (காரைதீவு), தோழர் வேலு (கல்லாறு), தோழர் ஷோபா (யாழ்ப்பாணம்),தோழர் ரஞ்சன் ((யாழ்ப்பாணம்),தோழர் அரவிந்தன் (காரைநகர்) ஆகியோருக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள். காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் பங்கெடுத்து களப்பலியான தோழர் ஷோபா ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திப்போராடி மரணித்த முதற் பெண் போராளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது – மோடி
(Stanley Rajan)
காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது என்ற அளவில் மோடி அழுவது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும் இம்சை இந்திரா ஒரு காலத்தில் அப்படி அழுதார் என்றால் காரணம் இருந்தது, பெரும் சவாலாக அவர் உலக நாடுகளுக்கு திகழ்ந்தார். ஜியா உல்ஹக், ஜெயவர்த்தனே, நிக்சன் என உலக பிரபலங்கள் எல்லாம் அவர் சாகவேண்டும் என விரும்பின அல்லது துடித்தன