மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில், வட மேல் மாகாணத்துக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

யாரு கண்ணுபட்டுப் போனதோ….? அந்த மாதிரி இருந்த ஊரு இந்த மாதிரிப் போனதே…..?

(சாகரன்)

2009 ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுற்று சில வருடங்களில் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என்றும் தமிழர் பிரதேசம் எங்கும் கட்டுமானங்கள் நடைபெற்றன. இலங்கையின் ஏனைய பாகங்களுடன் தமிழ் பிரதேசங்கள் வேக வழிச்சாலைகள் உருவாக்கப்பட்டன. பின்பு படிப்படியாக வீதித் தடைச் சோதனைகளும் அகற்றப்பட்டன. புலம் பெயர் தேசத்து உறவுகள் தாயகம் திரும்பி தமது ஊர்களுக்கு சென்று தாம் நிரந்தரமாக தங்கிவிடும் புலம் பெயர் தேசத்திற்கு திரும்பி வந்ததும் ஊர் எப்படி இருக்கின்றது என்றதற்கு ‘….அந்த மாதிரி இருக்குது ஊர்…” என்று கூவி மகிழ்ந்ததற்குள் இந்த பெரும் தெரு வேக இணைப்புகளும் மக்களின் அன்றாட தேவைகளுக்கான அபிவிருத்திகளும் தங்கு தடையற்ற வடக்கு கிழக்கிற்கு அப்பால் தெற்கிற்கும் பயணம் செய்து இடங்களைப் பார்த்து வருவதற்கும் உரிய இயல்பு நிலையொன்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகளே ஒழித்திருந்தன.

தடை செய்யப்பட்ட ஆடையுடன் வருகைதந்தவர்கள் கைது

தடை செய்யபட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் – ஜயபிம பிரதேசத்தில் வைத்து இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்​டிருந்த பெண்ணொருவர் முகத்தை முழுவதுமாக மறைத்தவாறு தனது கணவருடன் வருகைதந்துள்ளார்.

அமெரிக்காவில் உயர்மட்ட பேச்சுவார்த்தை

பயங்கரவாதத்தை முறியடிப்பது தொடர்பாக, எதிர்வரும் வியாழக்கிழமை (16), ஐக்கிய அமெரிக்காவில், பேச்சுவார்த்தையொன்று ந​டத்தப்படவுள்ளது.

வவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்

மட்டக்களப்பு வவுணதீவில், இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த முன்னாள் போராளி அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

என் உணர்வுகளை பிரபலித்திருக்கும் முகிலன்

(Saakaran)

நான் பல முஸ்லீம் நண்பர்கள் நண்பிகளோடு பழகியிருக்கிறேன்.

அவர்கள் ஒரு தடவையேனும் வார்த்தைகளால் கூட என்னை காயப்படுத்தவில்லை…

பெண்கள் என்றால் முகத்தை மூடி இருப்பார்கள் 
பெரும்பாலான ஆண்கள் தாடி வைத்திருப்பதால் பாதி முகத்தை மூடி இருப்பார்கள் . ஆனாலும் அவர்கள் மனசைத் திறந்து என்னோடு பழகினார்கள்.

நான் எந்த மார்க்கத்தையும் வெறுப்பதில்லை அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது.

அவர்கள் எல்லோருடைய வார்த்தைகளிலும் அல்லா ஒருவனே இறைவன் என்ற நம்பிக்கை மட்டுமே தெரிந்தது.

பொதுவாக என் வாழ்க்கையில் இன்னொருவருக்காக நான் நேரத்தை செலவழிப்பது மிகக் குறைவு.

அவர்கள் நாள் ஒன்றுக்கு பலமுறை தொழுவதை பார்த்து நான் பிரமித்திருக்கிறேன்.

நோன்பு காலங்களில் ஓரிரு தடவை பள்ளிவாசல் சென்று இருக்கிறேன்.

அவர்கள் வீடுகளுக்கு செல்லும்போது வரவேற்பும் உபசரிப்பும் மறக்கவே முடியாதது.

என் மதத்தைப் பற்றி அவர்கள் ஒருபோதும் தாழ்வான கருத்துக்களை பகிர்ந்ததில்லை…

அவர்களின் மத பரப்புரைகளை என்னில் திணித்ததும் இல்லை…

நான் எப்படி அவர்களை சகமனிதர்களாக பார்த்தேனோ அவர்களும் அதே போலவே என்னை நேசித்தார்கள்.

என் துயரங்களில் பங்கு எடுத்திருக்கிறார்கள் என் சந்தோசங்களை மிக படுத்தியிருக்கிறார்கள்.

குர்ஆன் வாசிப்பதை வழமையான பழக்கமாக வைத்திருந்தார்கள்.

ரம்ஜான் காலங்களில் என்னையும் கொண்டாட்டங்களில் இணைத்துக் கொள்வார்கள்.

கடவுளிடத்தில் பயமும் உயிர்களிடத்தில் அன்பும் அவர்களின் இஸ்லாமில் நான் பார்த்தேன்.

இப்போதைய சூழ்நிலையில் தயவு செய்து எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள் !

நெடுந்தீவு முகிலன்

சீமானுக்கு யாரும் சொல்லுங்கப்பா….?

(Kanniappan Elangovan)


தமிழ் சமூகம் அறிவியல், சமூக அறிவியல் இரண்டிலும் முட்டாள் இல்லை என இந்த சீமானுக்கு யாரும் சொல்லுங்கப்பா… Big Bang theory. ஆதிபகவன் என்றெல்லாம் தமிழின் பெயரால், வள்ளுவன் பெயரால் வெட்கமற்ற உளரல்கள் கேட்க சகிக்கவில்லை. இந்த தொழில்நுட்ப உலகத்தில் இப்படி மேடை ஏறி முட்டாள் தனத்தை அரங்கேற்றுவது யாரை அழிக்க? திமுக, அஇஅதிமுக வேண்டாம் என இவர்கள் கிளம்பியது பிரபாகரன் மரணித்த பிறகல்லவா?

தற்கொலையால் பிறரை கொல்லும் பயங்கரவாதிகள்

(Annesley Ratnasingham)
!!..தற்கொலைதாரிகளை எந்த ஒரு திட்டத்தாலும் நிறுத்தமுடியாது ஆனால் அவர்கள் சார்ந்த சமூகம் அதை முற்றாக வெளிப்படையாக நிராகரிக்கும்போது மட்டுமே அதை நிறுத்தலாம் ..
.
….தற்கொலைதாரிகளின் நடவடிக்கையால் அந்த சமூகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை , அந்த மதத்துக்கும் எந்த நன்மையையும் இல்லை என்பதை வெளிகாடட அந்த சமூகமே தெருவில் முழுமையாக இறங்கி போராடவேண்டும் …
.
……கடந்த உயிர்த்தநாள் மத அடிபடைகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் தமது அடையாளத்தை ஒழித்து அதை செய்யவில்லை ..!!
.
…………..அடுத்தது இவர்கள் நடத்திய தற்கொலை தாக்குதல்கள் ..தற்கொலை தாக்குதல்கள் இல்லாமேலேயே இதை செய்திருக்க முடியும் ….
…………………அப்போது எதற்கு அதை தற்கொலை தாக்குதலாக செய்தார்கள் என்ற கேள்வியை கேட்க்கும்போது பதில் கிடைக்கும் …
.
…அதாவது அவர்கள் ஒரு ராணுவ அணியையோ அல்லது ஒரு பாதுகாப்பு தர்ப்பையோ தற்கொலை தாக்குதல் செய்யவில்லை …
.
…………………ஒரு ராணுவ பாதுகாப்பு அரணுக்குள் நுழைவது கடினம் அதனால் அதை தற்கொலை தாக்குதலாக செய்யலாம் …
.
…ஆனால் இங்கு சாதாரண இடங்களில் தமது பொதியை கொண்டு சென்று அதை மேசைக்கு அடியில் தள்ளி விட்டு வெளியேறி இருக்கலாம் அல்லவா ???
.
….ஆகவே அவர்கள் அவர்களுடைய மக்களுக்கு இந்த செய்கையின்மூலம் வெளிப்படுத்தும் கருத்து அவர்களுடைய மதத்தில் சொல்லப்படவிடயங்களை நம்பிக்கை ஏற்படுத்துவதற்கே …
.
…ஆகவே அந்த மதத்தை சார்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை நிராகரிக்கும்போது அவர்கள் செய்யும் தற்கொலைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போதும் …
.
..ஆனால் அநேகர் அவர்களை முற்றாக நிராகரிப்பதாக இல்லை …( வெளிப்படையாக )
.
..அதன் காரணமும் மதமே …

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம்

(இலட்சுமணன்)

சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது.

‘இன்னும் 50பேர் உள்ளனர்’

தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50பேர் தயாராகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென பொதுபலசேனா தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.