19 எம்.பிக்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையில் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர், நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர்கள் ஐவர், பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் மூவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாஹல ரத்னாயக்க தெரிவித்தார்.