இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 3)

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராகக் கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் நிசடகநெவ.உழஅஇ ளழழனனசயஅ.உழஅ யனெ வாநநெந.உழஅ ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்புபட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்

முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

இஸ்‌ரேலும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும், கடந்த சில நாள்களாக ஆயுத முனையில் மீண்டும் பொருதிக் கொண்டிருக்கின்றன. இஸ்‌ரேலை நோக்கி, ஹமாஸ் இயக்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தின் காசாப் பகுதியை இடைவிடாது இஸ்‌ரேல் தாக்கி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இதுவரை 10 இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலிய தாக்குதல்களில் காசாப் பகுதியில், 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இலங்கை: கொரனா செய்திகள்

சீனாவிடமிருந்து 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,  அதில் ஒரு தொகுதியான 3 இலட்சம் தடுப்பூசிகளை ஒரு மாதத்துக்குள் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என,கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யை அர்த்தபுஷ்டியுடன் புகட்ட வேண்டும்

கடந்த 12 வருடங்களாக, மே மாதம் 18ஆம் திகதி, ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்’ ஈகைச் சுடரேற்றி நினைவுகூரப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் வந்துபோகும் நத்தார், புதுவருடம், தைப்பொங்கல், சித்திரைப்புத்தாண்டு, தீபாவளி, ஊர்க் கோவில் திருவிழா போன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் கடமையாகவோ, சடங்காகவோ, முகத்தைக் காட்டும் நிகழ்வாகவோ கருதிவிடக் கூடாது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றையதினம் மட்டும் 3,051 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். ஒரு நாளொன்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர்- 2)

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் eprlfnet.com, sooddram.com and thenee.com ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன். எனவே இக் கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.

ஈனர்களின் அருவருப்பு ஊட்டும் மாரடிப்பு

புலி ஆதரவாளர்கள் புலிகள் பற்றிய விமர்சனம் குறித்த விவாதத்தில் எங்களை மடக்கப் பயன்படுத்துகின்ற நாகாஸ்திரம் ஒன்றுண்டு.

கம்மாரிசு அடிக்க இவர்கள் வைத்திருக்கின்ற துரும்பு அது!

அதை நண்பர்களும் சில நேரங்களில் பயன்படுத்துகின்றார்கள்.

ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக, சிங்கப்பூர் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில், சிங்கப்பூர் ஓர் ஆச்சரியான தேசம்தான். எந்த இயற்கை வளங்களும் பெரிதாகக் கிடைக்காத, ஒரு குட்டி நகரம் அது.

நினைவேந்தலில் ஈடுபட்டஎண்மர் கைது

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் வைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்த 8 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இன்று (18) கைதுசெய்து செய்யப்பட்டுள்ளனர் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

பாணந்துறை- மோதரவில பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 450 பணியாளர்களுக்கு கொ​ரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, குறித்த நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்ததாக,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 2,500 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.