சிந்தித்துத் தீர்மானம் எடுப்பது நன்று

இலங்கையின் பெயர், இரண்டு சம்பவங்களால் உலகளாவிய ரீதிக்குச் சென்றிருந்தது என முன்னர் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதிலொன்றுதான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம். மற்றொன்று, 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சுவீகரித்ததன் ஊடாக, நாட்டின் நாமம் உலகளவில் பிரபல்யமடைந்திருந்தது.

மூவருக்கு புதிய தொற்று புளோரோனா

மெக்சிகோ 3 பேருக்கு புளோரோனா எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரோன் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் அடையளங்காணப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாடசாலைகளைத் திறந்த உகாண்டா

கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவில் கொரோனாத் தொற்றுப்  பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து; சோகத்தில் மக்கள்

மியான்மரில் கடந்த 2017-ஆம் ஆண்டு இராணுவம் முன்னெடுத்த தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கணிசமாக உயர்ந்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 593,072 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு

இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவையே பதிவு செய்யப்பட்டுள்ன. 2022 ஆம் ஆண்டுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48ஆவது நினைவு தினம், அம் மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின்  நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இன்று (10) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர்: மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிள்ளையாக தூக்கியெறிந்து விட்டனர் எனக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

இராஜினாமா செய்கிறார் மற்றுமோர் அமைச்சர்

மக்களின் பிரச்சினைகளை கேட்கவேண்டும். அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும். மக்களின் பிரச்சினைகளை பேச முடியாவிடின், இராஜாங்க அமைச்சர் பதவியை தூக்கியெறிய தான் தயாரென, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 592,128 ஆக அதிகரித்துள்ளது.