கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர்: மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்​தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடே குழப்பத்துக்குள் சிக்கித் தவிக்கிறது என்றுத் தெரிவித்த அவர், அம்மையார் காலத்தில் கூட இவ்வாறு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அன்று வரிசையில் நின்றிருந்த மக்கள், தூசனங்களை ​பேசவில்லை. நாட்டை ஆட்சி செய்யவேண்டுமாயின் நல்ல குழுவொன்று இருக்கவேண்டுமெனத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, தனியாக நின்றுக்கொண்ட நாட்டை ஆட்சிசெய்யமுடியாது என்றார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தை, சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நீடித்துக்கொள்வதற்கு தயாராக வேண்டாமென தான் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.