மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு

இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவையே பதிவு செய்யப்பட்டுள்ன. 2022 ஆம் ஆண்டுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.