வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை! ஒரு தேநீர்க் கிண்ணத்தின் விலையோ….?

(எஸ். ஹமீத்)

கடந்த 100 வருடங்களில் இப்படியொரு ஆடம்பரமானதும் பிரமாண்டதுமான மாளிகை உலகில் எங்கேயேனும் கட்டப்படவில்லையெனக் கூறுகின்றன சர்வதேச ஊடகங்கள். அமெரிக்க அதிபரின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையைவிட 30 மடங்கு பெரிய அந்த மாளிகையில் 1100 அறைகள் இருக்கின்றன. அதில் 250 அறைகள் துருக்கிய அதிபர் எர்டோகனின் முழுமையான பாவனைக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

(“வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை! ஒரு தேநீர்க் கிண்ணத்தின் விலையோ….?” தொடர்ந்து வாசிக்க…)

ஈரானின் ஏவுகணை: இஸ்ரேலுக்கு மரணம்!

நேற்றுக் காலை ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது தேசிய இராணுவ தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளது. சகல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்களுடன் இராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. அதில் ஈரானின் முக்கியமான பல ஏவுகணைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாகச் சென்றன. அதிலொரு ஏவுகணையில் ‘இஸ்ரேலுக்கு மரணம்’ என்று பாரசீக மொழியில் எழுதப்பட்ட பதாகை தொங்கிவிடப்பட்டிருந்தது.

(“ஈரானின் ஏவுகணை: இஸ்ரேலுக்கு மரணம்!” தொடர்ந்து வாசிக்க…)

சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்

(கருணாகரன்)

கோடை பிறந்தால் சூரியனுக்குக் கொண்டாட்டம். சூரியனுக்குக் கொண்டாட்டம் என்றால், நமக்குத் திண்டாட்டம். கொழுத்திக் கொண்டிருக்கிறது வெயில். அனலடிக்கிறது வெக்கை. வீட்டில் இருக்க முடியாது வெக்கை. வெளியிலும் திரிய முடியாது வெக்கை. பகலில் மட்டுமல்ல, இரவிலும் படுத்துறங்கவோ, ஒரு இடத்தில் ஆற அமர இருந்து, ஒரு காரியத்தைச் செய்யவோ முடியாது. வியர்த்துக் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. களைத்துச் சோர்ந்து விடுகிறது உடல். மின்விசிறியில் அல்லது ஏஸியில் தஞ்சமடையவேண்டும் போலிருக்கும். ஆனால், அது எல்லோருக்கும் எப்போதும் சாத்தியமானதா?. நீருக்கடியில் போய் மூழ்கிவிடவேண்டும் போலிருக்கும்.

(“சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

தாஜுதீன் கொலை வழக்கில் மகிந்தவின் மனைவி கைது செய்யப்படப் போகிறாரா…?

கொழும்பு நாராஹென்பிட்டி பிரதேசத்தில் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுடீன் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி மர்மமான  முறையில் கொலை செய்யப்பட்டார்.  அந்தக் கொலை சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

(“தாஜுதீன் கொலை வழக்கில் மகிந்தவின் மனைவி கைது செய்யப்படப் போகிறாரா…?” தொடர்ந்து வாசிக்க…)

திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்

இன்று காலை பிரித்தானிய நேரம் காலை 10.55 மணிக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென அவசர அவசரமாக அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கும் நிலையில் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு பிரிட்டனில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

(“திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்துவரும் தேர்தல்களில் ‘தனிச் சின்னத்தில் த.மு.கூ போட்டி’

“தமிழ் முற்போக்குக் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்துவத்துடன், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவருமான அ. அரவிந்தகுமார் தெரிவித்தார். அதனை முன்னிலைப்படுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(“அடுத்துவரும் தேர்தல்களில் ‘தனிச் சின்னத்தில் த.மு.கூ போட்டி’” தொடர்ந்து வாசிக்க…)

32 சடலங்கள் இதுவரை மீட்பு

கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. குப்பைமலை, கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சரிந்துவிழுந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்தன. எனினும், குப்பை மலைக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் இடைத்தேர்தல் காட்டும் நிதர்சனம்!

காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 9-ல் நடந்த இடைத்தேர்தலில், போராட்டக்காரர்களின் வன்முறை காரணமாக வெறும் 7% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, ஏப்ரல் 12-ல் நடக்கவிருந்த அனந்த்நாக் தொகுதி இடைத்தேர்தலைத் தள்ளிவைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லை எனும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையைப் புறந்தள்ளிய தேர்தல் ஆணையம், அனந்த்நாக் தொகுதியில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை இருப்பதாக மாநில நிர்வாகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இப்போது அந்தத் தொகுதியில் தேர்தலைத் தள்ளிவைத்திருக்கிறது.

(“காஷ்மீர் இடைத்தேர்தல் காட்டும் நிதர்சனம்!” தொடர்ந்து வாசிக்க…)

சசிகலா குடும்பத்தை கட்சியில் ஒதுக்கிவைக்க அமைச்சர்கள் முடிவு: தலைவர்கள் கருத்து

கட்சி நடவடிக்கைகளிலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு அறவே இல்லாத வகையில், அந்தக் குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கிவைக்க முடிவு செய்திருப்பதாக அதிமுக அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

(“சசிகலா குடும்பத்தை கட்சியில் ஒதுக்கிவைக்க அமைச்சர்கள் முடிவு: தலைவர்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளை பிரிட்டன் அதிகாரிகள் துவக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர் இந்தியா திரும்புவாரா என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா – பிரிட்டன் இடையேயான நாடுகடுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைதாகும் நபருக்கு சில உரிமைகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.