ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அமெரிக்காவில் வாழ்வதும் மடிவதும் ஒரு அழகிய கனவு என்று அமெரிக்காவின் கொத்துக்குண்டுகளிலிருந்து தப்பிய அப்பாவிகள் முகநூலில் அங்கலாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தகவல்கள் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு இப் பதினைந்து வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் தான். பச்சிழம் குழந்தைகளும், முதியவர்களும் கூட…

(“ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் செய்த தென் கொரிய பெண் அதிபர் அதிரடியாக வந்த ஆப்பு !

தென் கொரிய நாட்டின் அதிபராக முதன்முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் பார்க் கியுன் ஹை (வயது 65). பெண்ணான இவருக்கு சோய் சூன் சில் என்ற தனது நெருங்கிய தோழியின் வாயிலாக வினை தேடி வந்தது. இந்த சோய் சூன் சில், அதிபர் பார்க்கிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது அறக்கட்டளைகளுக்கு பல கோடி டாலரை முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலில் பார்க் கியுன் ஹைக்கு நேரடி தொடர்பு இருந்தது; அதிலும் குறிப்பாக அவர் தனது அலுவலகத்தில் ஏற்கத்தகாத வகையில் தோழிக்கு சகல உரிமைகளையும் வழங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது.

(“ஊழல் செய்த தென் கொரிய பெண் அதிபர் அதிரடியாக வந்த ஆப்பு !” தொடர்ந்து வாசிக்க…)

இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!

அந்தப் பெரியவர் தன் 95 வயதில் இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தி இன்று கிடைத்தது. அன்று அவர் உண்ட தேனில் ஊறிய காட்டு மாடு, மான் மரை வத்தல், உடன் பிடித்து சமைத்த உடும்பு கறி, கைக்குத்தல் அரிசிச் சோறு, அவரது தோட்டத்து மரக்கறி, பூநகரி கடலில் பிடித்த குட்டன் மீன், கணவாய், இறால், நண்டு, திருக்கை, சுறா, கூடவே உளுத்தம்மா கழி, அவித்த பனங்கிழங்கு, எள் உருண்டை, ராசவள்ளி அவியல், என அத்தனையும் உண்ட  பலத்தால்,

(“இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!” தொடர்ந்து வாசிக்க…)

சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில நாடுகள், சபிக்கப்பட்டவையோ எனச் சிந்திக்க வைக்கும் வகையில், மனிதாபிமான அவலங்கள், அந்நாடுகளில் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. நாடுகள், பல்வேறு காரணங்களுக்காக அறியப்படுகின்றன. அதில் சில, அவலங்களுக்காக மட்டுமே அறியப்பட்டன. அவை சபிக்கப்பட்ட நாடுகளன்று, மாறாக, திட்டமிட்டுச் சரிக்கப்பட்ட நாடுகள். உலகின் ஒரு மூலையில் பட்டினியால் மக்கள் சாகையில், இன்னொரு மூலையில் பல்லாயிரக்கணக்கானோருக்குப் பயனுள்ள உணவு வீணாக்கப்படுகிறது. உலகம் இவ்வாறுதான், நியாயமற்றவொன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பசியால் ஒரு மனிதன் சாவதென்பது கொடுமையானது.

(“சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்” தொடர்ந்து வாசிக்க…)

2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??

25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது…ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்…! அவருடைய வார்த்தைகள் முழுவதும் எனக்கு உடன்படாவிட்டாலும், அதில் நிதர்சனம் இருக்கிறது என்றே பட்டது. 1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

(“2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பின் புதிய பயணத் தடை: முதலில் நீதிமன்றத்தில் சவால் விடுத்தது ஹவாய்

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆறு நாடுகளிலிருந்தான பயணத்தைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய நிறைவேற்றுப் பணிப்புரையில் அவசர நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு, மத்திய நீதிமன்றமொன்றை, ஹவாய் மாநிலம் நேற்று (08) வினவியுள்ளது. இதனையடுத்து, புதிய தடையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் முதலாவது, மாநிலமாக ஹவாய் மாறியுள்ளது.

(“ட்ரம்ப்பின் புதிய பயணத் தடை: முதலில் நீதிமன்றத்தில் சவால் விடுத்தது ஹவாய்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபையில் பாதினிய செடி வளர்க்கும் விவசாய அமைச்சர்வடமாகாண சபையில் பாதினிய செடி வளர்க்கும் விவசாய அமைச்சர்

உடையார் செய்தால் குற்றமில்லை என்பது வடமாகாண சபைக்கு பொருந்தும். விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தனது நிதி ஒதுக்கீட்டில் பல லட்சங்களை பாதினியம் ஒழிப்புக்கு செலவிடுவதாக காட்டி நிதி மோசடி செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் பாதினிய செடிகள் பரவலாக காணப்படுகிறது. நீ திருந்து உலகம் தானாக திருந்தும்.

சிறீதரனின் சிறுபிள்ளை தனமும் சந்திரகுமாரின் செல்வாக்கும்

கிளிநொச்சியை வசித்த தன் குடும்பத்தை பா.உறுப்பினர் ஆனவுடன் யாழ்ப்பாணத்தில் வீடெடுத்து மாற்றினார் மனைவிக்கு பாராளுமன்றத்தால் வழங்கப்படும் பதவியை எடுத்துக்கொடுத்து வீட்டில் இருத்தினார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான இடைவெளியில் மனைவி வட்டக்கச்சி ம.விக்கு கற்பிக்க வேண்டிய சூழல் வந்தபோது இரண்டு மாதங்களுக்காக கல்வியங்காட்டுக்கு இடமாற்றம் செய்து கொண்டார். சிறீதரனின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.
சென்னையில் ஒரு வீட்டோடு காணி வாங்கியுள்ளார்.

(“சிறீதரனின் சிறுபிள்ளை தனமும் சந்திரகுமாரின் செல்வாக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

யார் யாருக்கு ஆப்பு வைக்கிறார்கள்?

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் நேற்று (07) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால் கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், அதன் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் ஆதரித்து நிற்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.

(“யார் யாருக்கு ஆப்பு வைக்கிறார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச பெண்கள் தினம்

(சாகரன்)
பிறப்பிற்கு முன்பு தன் குழந்தையை கற்பத்திற்குள் சுமப்பவள் பெண். இதனால் தாயாக மதிக்கப்படுகின்றாள். இதன் தொடர்சியாக குழந்தையின் வளர்சிக்காக பிறப்பிற்கு பின்பும் சுமக்கின்றார் தான் பெற்ற பிள்ளைகளை. இந்த பிறப்பிற்கு சரிபாதி காரணமாக இருக்கும் ஆண் பிறப்பிற்கு பின்பு தன் குழந்தைகளை பெண் அளவிற்கு சுமப்பதில்லை. இதனை உலகம் பொது நியதியாக்கி பெண் மீதான மேலாதிக்கத்திற்கு அத்திவாரம் இடுகின்றது. தொடர்ந்து வரும் வாழ்க்கை பயணத்திலும் குடும்ப சுமையை சுமக்கும் உயிரினமாக மாற்றப்பட்டு சுதந்திரத்தை சமூகம் மறுக்கின்றது. இந்த ஆண் மேலாதிக்க சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பயணிப்பவள் தனது தேடலுக்காக புறப்பட எத்தனிக்கும் போது ஏளனமாகப் பார்க்கப்படுகின்றார். மேலும் இந்தப் பார்வை பெண் குழந்தையாக இருக்கும் போதே ஆணை விடக் கீழானவள் என்ற கருத்தியலையும் ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் உரித்தானது என்று சமூக கட்டுப்பாடு, மதக்கட்டுப்பாடு என்றும் தடை போட்டு நியாயப்படுத்த முயலுகின்றது.

(“சர்வதேச பெண்கள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)