Hummer-ஐ கொண்டுவந்தார் சித்தார்த்தன்

அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் மாத்திரம், Hummer (ஹம்மர்) ரக மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனே, இவ்வாறு ஹமர் ரக வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)

பின்னப்பட்ட சதிவலை (Part 1)

1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் ( Liberation Tigers of Tamil Ealam-LTTE ) இயக்கம் 1980களில் ஏனைய இயக்கங்களை பிரதான அரங்கில் இருந்து முடக்கியதன் மூலம் தனிப்பெரும் இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. அத்துடன் 1990களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் முட்டுமே என்கின்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தியத்துடன் மிதவாத தமிழ் அரசியலையும் முடக்கத்தொடங்கினர். வெறுமனே போராட்ட இயக்கம் என்கின்ற வடிவத்தில் இருந்து மாறி அரசியல் இயக்கமாகவும் தம்மை வெளிக்காட்ட முயன்றனர். புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலானது ஒரு கட்டத்தில் இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு என்னும் இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசியலையே தீர்மாணிக்கின்ற சக்தியாக உருப்பெற்றதுடன் இந்த நாட்டின் இருபது மில்லியன் மக்களின் தலைவிதியை தீர்மாணிக்கின்ற ஒரு சக்தியாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாகவும் வழிவகுத்தது.இலங்கை அரசியல், பொருளாதார, சமூக அமைப்பை மட்டுமல்லாமல் அரசு படைகளுடனான் போரின் போக்கு, போர்நிறுத்தம், அரசுடனான சமாதான பேச்சுக்கள் என்பவற்றைக்கூட அவரே தீர்மாணித்த்திருந்தார்.

(“பின்னப்பட்ட சதிவலை (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

தேசிய கலை இலக்கிய பேரவை யில் 15.10.2016 சனிக்கிழமை நடைபெற்ற.

 

‘சாதியம் மறுப்போம் – சமத்துவம் காண்போம், மனங்களை விரிப்போம் – மனிதராய் எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக இடம்பெற்ற ஆய்வரங்கின் காட்சிகள்.

பின்னோக்கி செல்லும் நினைவலைகள்!

முப்பத்தி எட்டு ஆண்டுகள் கடந்தும் நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை, மன ஆதங்கத்தை கலந்து தரும் தருணத்து பதிவு இது. கல்வியின் உச்ச நுழைவாயிலான பட்டம் பெறல் என்ற, பல்கலைக்கழகம் செல்லும் தெரிவு கிடைத்த மகிழ்ச்சியை எனக்கு தந்த ஆண்டு 1978. அதே ஆண்டில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட, அனர்த்தத்தை நேரில் கண்டது ஆதங்கம். ஆனால் அழிவில் இருந்து மீண்டுவர கிழக்கை நோக்கிய வடக்கு இளையவர்களின் வருகை பேருவகை. கட்சி அரசியலுக்கு அப்பால் வடக்கும் கிழக்கும் அதுவரை மனதளவில், பிரதேசவாதம் இன்றி செயல்ப்படவில்லை. பின்பு கட்சி அரசியலில் கூட செல்லையா இராஜதுரை சந்தித்ததும், தலைமைத்துவ மோகத்தால் வந்த பிரதேசவாதம் என்பது மறுப்பதற்கு இல்லை.

(“பின்னோக்கி செல்லும் நினைவலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியரின் உயிரைப் பறித்த மதம்

யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில் அவர்கள் நேற்றிரவு 15.10.2016 காலமாகி விட்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பசில் ஆசிரியரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து சுய நினைவை இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

(“யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியரின் உயிரைப் பறித்த மதம்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று துளிகள் ..

“1919 ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் படுகொலை
1940 மார்ச் 13 லண்டனில் வைத்து மரண தண்டனை”

ஜாலியன் வாலாபாக் சுதந்திர போராட்ட போராட்டம் நடத்திய மக்கள் மீது 15 நிமிடத்திற்கு விடாமல் துப்பாக்கி சூடு 1000 பேர் உடனடி மரணம். சுடும் போது மக்கள் தப்பிக்காமல் இருக்க வழிகளை அடைக்க உத்தரவு போட்டார் ஜெனரல் டயர் , அதையும் மீறி மதில் மேல் ஏறி தப்பி ஓடியவர்களை நோக்கி வெளியில் இருந்த ராணுவம் துப்பாக்கி சுடு நடத்தியது ரத்த வெள்ளத்தில் வீதிகளெங்கும் 2000 பேர்.

(“வரலாற்று துளிகள் ..” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 3)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

அந்த நேரம் EPRLF  தடை செய்யப்பட்ட இயக்கமாக புலிகளால்  அறிவிக்கப்பட்டது.அவ்வேளை சிவகாமியும்  கண்காணிக்கப்பட்டாள். தடைசெய்யப்பட்ட இயக்கத்திலிருந்த போராளிகள் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சாப்பிட வழியற்ற நிலையில் நோயும் தாக்கி காடுகளுக்குள் மறைந்து வாழ்ந்தார்கள். அவ்வேளை சிவகாமியால்  சிலர் பாதுகாக்கப்பட்டு வேறிடங்களுக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த வேளை தான் புலிகள் காட்டிக்கொடுக்குப்பின் சிவகாமியைக் கைது செய்து 49 நாட்கள் சித்திரவதை செய்தார்கள்.உடல் சித்திரவதை இல்லாமல் விசாரணை என்ற போர்வையில் நிறைய மன உழைச்சலை ஏற்படுத்தினார்கள்.தனது சொந்தக் கிராமத்திலிருந்து சிவகாமி மேலதிக விசாரணைக்காக  யாழ்ப்பாணம் இருபாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரணக்குட்படுத்தப்பட்டாள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

•வோட்டு போட்ட மக்களோ பட்டினியில்- ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களோ சொகுசு வண்டியில்.

 

தீர்வை வரியின்றி கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த சொகுசு வாகன இறக்குமதியால் அரசுக்கு 40 பில்லியன் ரூபா இழப்பு வருடமொன்று ஏற்படுகிறது. இதில் 4 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விபரம் வருமாறு,

(“•வோட்டு போட்ட மக்களோ பட்டினியில்- ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களோ சொகுசு வண்டியில்.” தொடர்ந்து வாசிக்க…)

இருபத்தி நான்கு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)

(எஸ்.எம்.எம்.பஷீர்)

இதே திகதியில் இன்றைக்கு சுமார் 21 வருடங்களுக்கு முன் அதிகாலைப் பொழுது புலர இன்னும் ஓரிரு மணித்தியாலங்கள் இருந்தன. இன்னும் இருள் மண்டிக் கிடக்கிறது. கதிரவன் நாளை வழக்கம் போல் வைகறையில் எழுவான் என்ற நம்பிக்கையுடன்தான் அகமட்புரம் , அக்பர்புரம் கிராம மக்கள் அதற்கு முன் தினம் துயிலச் சென்றிருந்தனர்.

(“இருபத்தி நான்கு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டொப்பந்தம் இன்றும் இல்லை?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்தினால் புதியதொரு நிபந்தனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான வேலைநாட்களைக் குறைக்கும் இந்த நிபந்தனையை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறிய தொழிற்சங்கங்கள், இன்று வௌ்ளிக்கிழமை (14), கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதென்பது சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டின.

(“கூட்டொப்பந்தம் இன்றும் இல்லை?” தொடர்ந்து வாசிக்க…)