பின்னப்பட்ட சதிவலை (Part 1)

1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் ( Liberation Tigers of Tamil Ealam-LTTE ) இயக்கம் 1980களில் ஏனைய இயக்கங்களை பிரதான அரங்கில் இருந்து முடக்கியதன் மூலம் தனிப்பெரும் இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. அத்துடன் 1990களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் முட்டுமே என்கின்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தியத்துடன் மிதவாத தமிழ் அரசியலையும் முடக்கத்தொடங்கினர். வெறுமனே போராட்ட இயக்கம் என்கின்ற வடிவத்தில் இருந்து மாறி அரசியல் இயக்கமாகவும் தம்மை வெளிக்காட்ட முயன்றனர். புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலானது ஒரு கட்டத்தில் இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு என்னும் இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசியலையே தீர்மாணிக்கின்ற சக்தியாக உருப்பெற்றதுடன் இந்த நாட்டின் இருபது மில்லியன் மக்களின் தலைவிதியை தீர்மாணிக்கின்ற ஒரு சக்தியாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாகவும் வழிவகுத்தது.இலங்கை அரசியல், பொருளாதார, சமூக அமைப்பை மட்டுமல்லாமல் அரசு படைகளுடனான் போரின் போக்கு, போர்நிறுத்தம், அரசுடனான சமாதான பேச்சுக்கள் என்பவற்றைக்கூட அவரே தீர்மாணித்த்திருந்தார்.

1983 – 1987 வரையான இலங்கை படைகளுடன் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களின் போர் அதன் பின் 1987-1990 வரை இலங்கை அரசின் அனுசரனையுடன் இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் எனபன ஈழப்போர் I என வரையறுக்கப்பட்டுகின்றது. அதன் பின் பிரேமதாச அரசாங்கத்துடனான சமாதானபேச்சை தொடங்கிய புலிகள் விரைவிலேயே அதனை முறிந்த்துக்கொண்டு அரசு படைகளுடன் போரில் இறங்கியிருந்தனர். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக போரை தொடர்ந்த புலிகள் 1994 செப்டெம்பர் 13ல் BBC வானொலிக்கு பிரபாகரன் வழங்கிய பேட்டியில் போரை நிறுத்ததுக்கான தனது விருப்பத்தை வெளியிட்டதன் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தனர். அத்துடன் சந்திரிகா அரசாங்கத்துடன் சமாதான பேச்சுக்களை தொடங்கினர். பிரேமதாச அரசாங்கத்துடனான போரை தொடங்கிய புலிகள் சந்திரிகா அரசுடனான போர்நிறுத்தம், சமாதான பேச்சுக்கள் என ஈடுபடத்தொடங்கிய காலப்பகுதி வரைக்குமான போரானது ஈழப்போர் II என க்கூறப்படுகின்றது. ஈழப்போர்II காலப்பகுதியில் தனிபெரும் சக்தியாக புலிகள் உருவாக தொடங்கியிருந்தனர். ஈழபோர் I காலப்பகுதியில் விடுதலை போராளிகளாகவும் மக்களின் பெருத்த ஆதரவுடனும் திகழ்ந்த புலிகளை ஈழப்போர் II காலப்பகுதியில் உலகம் பயங்கரவாதிகளாக பார்க்க தொடங்கியது.

1991 மே 21ல் இந்திய முன்னாள் பிரதமரும் புகழ்பெற்ற மனிதராகவும் திகழ்ந்த ராஜிவ் காந்தியை படுகொலை செய்தமை, அதன் பின் 1993 மே 1ல் இலங்கை ஜனாதிபதி ரனசிங்கே பிரேமதாசவை கொலை செய்தமை அத்துடன் நிராயுத பாணிகளான மென் அரசியல்வாதிகள், மாற்றுக்கொள்களுடையவர்கள், கல்வியியலாளர்கள், என பலரை படுகொலை செய்தமை, வேறு பலருக்கும் உயிரச்சுருத்தலை ஏற்படுத்தியமை, பொதுமக்கள் நிலைகள் மீது குண்டுத்தாக்குதல்கள், தற்கொலைத்தாக்குதல்கள் என பலகுற்றச்சாட்டுகள் புலிகள் மீது சுமத்தப்பட்டு அவர்களை பயங்கரவாதிகளாக உலகம் அடையாளப்படுத்த தொடங்கியிருந்த்தது. ஆனாலும் இலங்கை அரசு படைகளும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய துனை ஆயுதக்குழுக்களும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், அட்டூளியங்கள் போன்றவற்றில் இருந்து தங்களை காப்பாற்றக்கூடியவர்களாக புலிகளையே தமிழ் மக்கள் நம்பினர்.
ஈழப்போர்I காலப்பகுதியில் கொரிலா தாகுதல்கள், பதுங்கி தாக்குதல்கள், சிறு முற்றுகை தாக்குதல்கள் மற்றும், அதிரடி தாக்குதல்கள் வழிமறிப்பு தாகுதல்கள் என ஒரு மட்டுபடுத்தப்பட்ட அளவிலான குழுத்தாக்குதல்களை மட்டுமே நடாத்திக்கொண்டிருந்த புலிகள் ஈழப்போர் IIல் இராணுவ நடவடைக்கைகளுக்கான இடைமறிப்பு தாக்குதல்கள், முறியடிப்பு தாகுதல்கள், முழு அளவிலான முற்றுகை தாகுதல்கள் என தமது இராணுவ மற்றும் போரிடும் வலிமையை வளர்த்துக்கொண்டத்துடன், போர் படையணிகளை கொண்ட சிறியளவிலான மரபுமுறை இராணுவமாக வளர்ச்சி பெற்றிருந்தனர். இந்த காலப்பகுதியிலேயே தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரு நடைமுறை அரசாங்கத்தை அமைத்து இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கியும் இருந்தனர். சந்திரிகா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை முறிந்த்துக்கொண்டு ஈழப்போர் III ஐ தொடங்கிய புலிகள் ஒரு முழுமையான தொழில்முறை இராணுவபடைககளை கொண்ட அமைப்பாக மாறியிருந்தனர்.

தற்காப்பு தாக்குதல்கள், முறியடிப்பு தாக்குதல்கள், வலிந்த தாக்குதல்கள், முற்றுகை தாக்குதல்கள், கொரில்லா தாக்குதல்கள், பதுங்கி தாக்குதல்கள் என்றளவில் இருந்த புலிகள் எதிரிகளின் பிரதேசங்கள் மீது முழுமையான இராணுவ நடவடிக்கையினை நடாத்தும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருந்தர. புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தவிர கருணா, பால்ராஜ், சூசை, போன்வர்கள் புகழ்மிக்க படைத்தலைவர்களாகவும் மிளிரத்தொடங்கினர். இவர்க்ளை தவிர தீரமிக்க வேறு தாக்குதல் தளபதிகளும் உருவாகி இலங்கை அரசுக்குபடைகளுக்கு போர் அரங்கில் சிம்ம சொர்ப்பணமாக விளங்கத்தொடங்கினர். இவ்வாறு பிரபாகரனை தவிரவும் வேறு இரண்டாம் நிலை இராணுவ தளபதிகள் உருவெடுத்தமையினால் இயல்பாகவே உருவான போட்டி பொறாமைகளினால் புலிகள் இயக்கத்தினுள் உள்முரன்பாடிகள், சீர்குலைவுகள் ஆரம்பித்திருந்தாலும் இலங்கை படைகள் போன்று சீராழிவுகள் அவர்களிடத்தில் காணப்பட்டிருக்கவில்லை.
இலஞ்சம், ஊழல், பணத்துக்காக இராணுவ இரகசியங்களை புலிகளுக்கு வழங்குதல், புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அரசு கட்டுப்பாட்டு பகுதிகளில் உதவுதல், மக்கள் மத்தியில் இராணுவம் தொடர்பில் பயத்தையும் வெறுப்பையும் உருவாக்குவதற்க்காக புலிகளுடன் இணைந்து செய்ற்படல், அரசியல்வாதிகளையும், உயர் அதிகாரிகளையும் திருப்திபடுத்தல், புலிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போர்களங்களில் இருந்து தப்பியோடுதல் இதன் மூலம் போரில் இராணுவத்தை தோல்வியடையச்செய்தல் இவ்வாறு பல்வேறு ஒழுக்கவீன செய்ற்பாடுகளால் புலிகளுடனான போரில் வெற்றிபெறமுடியாத ஒரு படைகளாகவே இலங்கை படையினர் ஈழப்போர் III நிறைவு பெறும் வரை இருந்தனர். தொழில்முறை இராணுவமாக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை அவ்வப்போது அரசு படைகள்செய்த்திருந்தாலும் அதன் மூலம் கைப்பற்றப்படும் பிரதேசங்களின் ஆள்புல ஒருமைபாட்டை பெரும்பாலும் தக்கவைக்க முடியாதவர்களாகவே அரசு படையினர் இருந்திருக்கின்றனர். ஈழப்போர் IIIன் இறுதிபகுதியில் அவர்கள் வெறும் தற்காப்பு தாக்குதலை மட்டுமே செய்யும் இராணுவமாகவும் தம்மை காப்பாற்றிக்கொள்ள வெளிநாட்டுகளின் உதவியை பெரும் நிலைக்குள் தள்ளப்பட்டும் இருந்தனர். புலிகள் போன்றில்லாமல் அரசியல், இராணுவ தலைமைத்துவம் வெவ்வேறானவையாகவும், இராணுவ கட்டமைப்பில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இருந்தமையுமே இலங்கை படைகளின் இந்த நிலைமைக்கு காரணம் இருந்தது.

முன்னைய இரண்டு போர்களிலும் அரசு படைகளை விட புலிகளுக்கே போர்நிறுத்தம் தேவையாக இருந்தது. காரணம் சிதைவடைந்த தமது போர் படைகளை மீள ஒழுங்கமைத்துக்கொள்ளவும், அடுத்த சில ஆண்டுகளுக்கு போரை தொடர்வதற்கான தயார் படுத்தல்களில் ஈடுபடுவதற்கும் அவர்கள் போர்நிறுத்தங்களை பயன்படுத்திக்கொண்டனர். ஈழப்போர் Iன் முடிவில் பிரேமதாச அரசுடனான சமாதான பேச்சுக்களின் போது ஈழப்போர் IIற்கான தயார் படுத்தலிலும் பின்பு சந்திரிகா அரசுடனான பேச்சுக்களின் போது ஈழப்போர் IIIற்கான தயார் படுத்தலிலும் புலிகள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் ஈழப்போர் IIIல் ஏற்பட்ட இழப்புக்களால் அரசாங்கமும் போர்நிறுத்தம் ஒன்றை விரும்பியிருந்தது. அத்துடன் போரை தொடர்ந்து மேற்கொள்ளும் மனவுறுதியை இழந்திருந்த படையினருக்கு ஒரு போர் ஓய்வு அவசியமானதாகவும் இருந்தது. புலிகளின் “ஓயாத அலைகள்” இராணுவ நடவடிக்கையின் மூலம் முல்லைதீவு இராணுவமுகாம் தாகுதல் வெற்றி , வவுனியா வடக்கில் நிலைகொண்டிருந்த படையினரை பின்வாங்கி ஓமந்தை வரை ஓடச்செய்தமை, ஈழப்போர்களின் பெரும் கௌரவமாக இருதரப்பும் கருதிய ஆனையிரவு இராணுவ தளத்தினை தாக்கியளித்ததுடன் யாழ்குடாநாட்டில் நிலைகொண்டிருந்த அரசு படைகளை நெருக்கடிக்குள் தள்ளியமை என தொடர் வெற்றிகளால் ஏற்பட்ட இராணுவ சமநிலை மாற்றம், கட்டுநாயக்க விமாநிலையம் மீதான தாகுதல் மூலம் அரசை ஆட்டம் காணச்செயதமை என வெற்றிப்படியில் நின்றிருந்த புலிகள் 2001 ஆகஸ்ட் 30 அரசு அறிவித்த போர்நிறுத்ததை நிராகரித்திருந்தனர்.
ஆனாலும் 2001செப்டம்பர் 11ல் உலக மகா வல்லரசான ஐக்கிய அமெரிக்க குடியரசுகள் மீது அல்கொய்தாவின் தாக்குதல் ஒரு முக்கியமான திருப்புமுனையை உலக வரலாற்றில் ஏற்படுத்தியது. அதுவரை இருந்த உலகின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றி எழுதியது. புதிதாக உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு ஏனைய நாடுகளை போலவே இலங்கையிலும் மாற்றத்தை உருவாகியது. ஈழதமிழரின் வரலாற்று காட்சிகளும் மாறத்தொடங்கின. அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் கைங்கரியத்தால் அதுவரை எதிரிகளாக இருந்தோர் நண்பர்களாகினர், நண்பர்கள் எதிரிகளாகினர். துரோகிகள் தோழர்களாகினர். தோழர்கள் துரோகிகளாகினர்.தமது முகத்தில் பூசப்பட்ட கரியை துடைப்பதற்கு அமெரிக்கா உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கியது. அங்கீகரிக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆயுத போரில் ஈடுப்பாடவர்களை அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்கா, அவர்களையெல்லாம் “பயங்கரவாதிகளாக” பிரகடணப்படுத்தியது. தமது நாடுகளில் இவ்வாரான ஆயுத போராட்டங்களை சந்தித்து வந்த அரசுகளுக்கெல்லாம் அமெரிக்காவின் உதவி கிட்டியது. இலங்கைக்கும் கிட்டியது.

தொடரும்..

(Rajh Selvapathi)