‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார்.
Author: ஆசிரியர்
சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.
சோவியத் யூனியனில் “தத்துவார்த்தம் ஊட்டப் பட்ட சமூகம்” இருந்ததாக சிலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதாவது, மாணவர்கள், மக்கள் எல்லோரும் “சித்தாந்தத்தால் மூளைச் சலைவை” செய்யப் பட்டனர் என்பது தான் அவர்கள் சொல்ல விரும்புவது. அது சுத்த அபத்தமான கற்பனை. முதலில் சோவியத் யூனியன் மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும் பெரும்பாலான பாடங்கள் பொதுவானவை. வரலாறு, சமூகவியல் போன்ற பாடங்கள் மட்டும் தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்.
(“சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.” தொடர்ந்து வாசிக்க…)
ஐ.நாவின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவானார்
ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் என்டனியோ கட்ரெஸ், தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது, அடுத்த செயலாளர் நாயகமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய, ஐ.நா. பொதுச் செயலாளரான பான் கி மூனின் பதவிக் காலம் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன்பின்னர், புதிய செயலாளர் பதவியேற்பார்.
ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு
(சிவா ஈஸ்வரமூர்த்தி)
என்னையும் ஆசிரியராக்கிய எனது ஆசிரியர்களின் நினைவுகளை மனத்தில் மீட்டுப் பார்க்க வைக்கும் இந்த ஆசிரியர் தினத்தை நான் நினைவு கூர்வதில் மகிழ்ந்து நிற்கின்றேன். புலம் பெயர் தேசத்து பட்டமும் இதனைத் தொடர்ந்த பயிற்சிகளும் என்னை கணணித்துறையில் வாழ்க்கையிற்கு தேவையான பொருளீட்டுதலுக்கான பணத்தைத் தேடுவதில் ஈடுபடுத்தியிருந்தாலும் நான் ஆசிரியராக என்னை அடையாளப்படுத்துவதில் மகிழ்ந்திருக்கின்றேன். மகிழ்ந்திருக்கின்றேன் என்பதையும் விட எனது அடையாளமாக ‘மாஸ்ரர்” என்பதே பொது வெளியில் அதிகமாக இருக்கின்றது தெரிகின்றது. தொடரந்தால் போல் 40 வருடங்களாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தில் ஈடுபடுவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
(“ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)
யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்
சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.
(“யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)
அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி
வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(“அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி” தொடர்ந்து வாசிக்க…)
சம்பளப் பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு
(கவிதா சுப்ரமணியம்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் சங்கத்துக்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற 11ஆவது பேச்சுவார்த்தையில், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
(“சம்பளப் பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு” தொடர்ந்து வாசிக்க…)
கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை
நெதர்லாந்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, வேலையில்லாப் பிரச்சினை நிலவிய காலத்தில், இரண்டு வருடங்கள் தபால்காரர் வேலை செய்து வந்தேன். அப்போது என்னுடன் ஒரு கனடிய (வெள்ளையினப்) பெண்ணும் வேலை செய்தார். கனடா பற்றி அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியமாக இருந்தன.
(“கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)
உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.
(“உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.” தொடர்ந்து வாசிக்க…)
முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!
முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை எளிய இளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, அதிமுக கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால், சின்னஞ்சிறிய ஏழை குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
(“முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!” தொடர்ந்து வாசிக்க…)