இரத்தினத்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை எமக்கு மட்டுமல்ல அன்று போராடிக்கொண்டிருந்த எல்லோருக்கும்,அவரை அறிந்தவர்களுக்கும் ஏற்படுத்தியது.எமது எதிரிகள் கொடிகாம்ம் அய்யாவுக்கும் எதிரிகள்.அவரும் கொஞ்சம் நிலை குலைந்தார். இதுவரை கட்டுப்பாட்டோடு இருந்த எமது ஊர் இளைஞர்கள் பயப்படவில்லை.மிக ஆவேசம் கொண்டனர்.உறவுக்கார்ர்கள் அவரது ஈமக்கிரியைகள் சம்பந்தமாக செயற்பட அன்றிரவே குழுக்களாக எதிரிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தேடினர்.அவரகளின் திட்டம் அங்கே ஒரு பிணம் விழவேண்டும்.சந்தேகத்துக்கு உரிய தில்லைநாதன்,இராசரத்தினம்,சின்னக்குட்டி என பலர் வீடுகளில் இரவுத் தேடுதல் நடாத்தினர்.யாரும் அகப்படவில்லை.ஒரு மாதம் வரை தொடர்ந்தது.கொலையாளிகள் யாரும் வாய்திறக்கவில்லை.
(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)” தொடர்ந்து வாசிக்க…)