கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு

காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்…. இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள்.

(“கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(23)

( தேவனாலும் மறவனாலும் குறி வைக்கப்பட்ட மாணவர்கள்.)

முழு அளவினான போர் தொடங்கி இரண்டு நாட்களே கடந்திருந்த நிலையில், விமானப் படையினரும், தங்களது தாக்குதல்களை இப்போது முழுமையாக தொடக்கியிருந்தனர். முன்னைய ஈழப்போர் போன்று அல்லாமல், ஈழப்போர் நான்கில் புலிகளைவிட , இராணுவத்தினரின் கை மோலோங்க ஆரம்பித்திருந்தது. இராணுவம் தரை வழித் தாக்குதல்களை வடக்கில் தொடங்காத போதும், விமானப் படையினர் மூலம் வன்னி வான் பரப்பை மாத்திரமல்லாமல், முழு நாட்டினது வான் பரப்பையும் , 24 மணி நேரமும் தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்று கொண்டிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(23)” தொடர்ந்து வாசிக்க…)

காணாமல் போனாரா பிரபாகரன்?

தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.

(“காணாமல் போனாரா பிரபாகரன்?” தொடர்ந்து வாசிக்க…)

சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்

(மொஹமட் பாதுஷா)

நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற போது, கரையோர மாவட்டம், கரையோர அல்லது தென்கிழக்கு அலகு, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற எல்லா வார்த்தைகளும் ஒரு தெளிவில்லாத அடிப்படையிலேயே மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு சொற்றொடரினதும் சொற்பொருள் விளக்கத்தையும் அறியாதிருப்பதை முஸ்லிம் அரசியலில் தெட்டத் தெளிவாக காணலாம்.

(“சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(22)

(பயிற்சி முகாம்களில் இருந்து தப்பி ஓட முயன்ற மாணவர்கள்.)

ஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது . சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம் மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006 மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின் தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(22)” தொடர்ந்து வாசிக்க…)

(தமிழ்)ஈழப்போர் நடந்த காலத்தில் (வர்க்கப் )பிரச்சினை இருக்கவில்லை

ஈழப்போர் நடந்த காலத்தில் வர்க்கப் பிரச்சினை இருக்கவில்லை என்று பாசாங்கு செய்வோரின் கவனத்திற்கு: இதோ ஒரு நேரடி சாட்சியம். இந்த வீடியோவில் காணாமல்போன பிள்ளையின் தாய் சொல்வதைக் கேளுங்கள். இதை நாங்கள் சொன்னால் “இடதுசாரி” என்று திட்டுவார்கள். தேசிய உணர்வை உடைப்பதாக தமிழ்த் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஆனால், ஈழத்தின் யதார்த்தம் அவர்களது கனவுலகிற்கு முரணாகவே உள்ளது.

(“(தமிழ்)ஈழப்போர் நடந்த காலத்தில் (வர்க்கப் )பிரச்சினை இருக்கவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(21)

(இயக்கமே உங்களது மதம் தலைவரே உங்களது கடவுள்!)

நாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள் இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர் அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே ஆடிக்கொண்டிருந்தார். நாள் முழுதும் பங்கர் வெட்டுவதற்க்கு விட்டப்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளும் அதனை தொடருமாறு கூறப்பட்டது. மூன்றாம் நாள் பின்னேரம் வரை தொடர்ந்த பங்கர் வெட்டும் பணி முடிவடைந்தது. அந்த பங்கர்கள் பயிற்சியின் போது இடம்பெறக்கூடிய விமானத்தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள தங்களுக்காவே அமைக்கப்பட்டது என உணரத்தொடங்கினர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(21)” தொடர்ந்து வாசிக்க…)

புலம் பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாட்டங்களும்….! களியாட்டங்களும்…..!

(சாகரன்)

பொதுவாக புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் பொது அமைப்புகள் நடாத்தும் கொண்டாட்டங்கள் களியாட்டங்களுக்கு போகும் பழக்கங்களை கொண்டவன் அல்ல நான். காரணம் இவை பெரும்பாலும் புலிப்பினாமிகளால் நடாத்தப்படுபவை என்பதினால். மேலும் இவற்றின் முழுநோக்கமூம் உண்டியல் குலுக்கி இதில் சேரும் பணத்தை ஆயுதம் வாங்க இதனைப் பயன்படுத்துவதும் அன்றேல் தேசியத்தை கூறிக்கொண்டு தனிநபர்கள் அல்லது தமது கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள தனி நிறுவனங்களில் கணக்கில் இவற்றை வைப்பிலிடுவதும் ஆகும். இதனை நடாத்துபவர்கள் தமது வாழ்நாள் சாதனையாக வேலை செய்யாமல் வாழுவதை உறுதிப்படுத்தவுமே இந்த கலக்ஷன் பெரும்பாலும் பாவிக்கப்படுவதும் காரணம் ஆகும். இதற்கு அவர்கள் பாவிக்கும் சொற்பதங்கள் தமிழர்களின் கலை கலாச்சாரங்களை பேணிப்பாதுகாக்க விழா எடுக்கின்றோம்; அல்லது தமிழரின் அடையாளங்களை நிலை நிறுத்துகின்றோம் என்று தம்மை மீட்போராக காட்டுவதும் அல்லது தேசியம் என்று இதன் அர்த்தம் விளங்காமல் பாவிப்பதும்; ஆகும்.

(“புலம் பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாட்டங்களும்….! களியாட்டங்களும்…..!” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(20)

(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)

2006 ஜூன்/ ஜூலை மாதங்களில்மண்வெட்டி பிடிகளுடன்தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கானமுதலுதவி மற்றும் தலைமைத்துவஉடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால்மண்வெட்டி பிடிகளுக்குபதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்சியாக மாறியிருந்தது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(20)” தொடர்ந்து வாசிக்க…)

பிராபகரனை கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்பது சரியா தவறா…? – உலகத் தலைவர்கள் கருத்து

மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

(“பிராபகரனை கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்பது சரியா தவறா…? – உலகத் தலைவர்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)