தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)

(1968 களில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நடைபெற்ய தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எமது சமூகத்தில் நடைபெற்ற போராட்டதில் மிக முக்கியமானது. இதன் பெரு வெடிப்புக்கள் அச்சுவேலிஇ சங்கானைஇ மாவிட்புரம்இ மந்துவில் போன்ற இடங்களில் ஏற்பட்டன. இதில் இரத்தினம். தவராசா என்ற இருவர் கொல்லப்பட்டனர். சீனக் கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்த போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தனர் தமிரசுக் கட்சியினர் ஆதிக்க சாதியினர் பக்கம் பக்க பலமாக நின்றனர். இவர்கள் தமக்கு பக்க பலமாக தமிழ் பொலிசாரையும் வைத்திருந்தனர். இவை பற்றி கேட்டவற்றை அறிந்து அனுமானித்ததை விஜய பாஸ்கரன் என்பவர் தனது மொழி நடையில் எழுதுகின்றார். அவரால் பாவிக்கப்படும் சில சொற் பிரயோகங்களில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லையாகினும் அவர் சொல்ல வந்த விடயத்தில் உடன்பாடுகள் நிறையவே உள்ளன. இதனை ஒரு அவசியான வரலாற்று ஆவணப் பதிவாக பார்பதினால் இதனை வெளியிடுகினறோம் – ஆர்)

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)” தொடர்ந்து வாசிக்க…)

விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?

பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மறுக்கப்படும் இரகசியம் “தமது பிரதேசங்கள் பொருளாதார வளமிக்க இடமாக இருப்பதுவே காரணம் என அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.

(“விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது!

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடையமாக தமிழர் பேரவை பேசிக்கொண்டிருக்கிறது. கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் கிழக்கு மாகாண மக்களின் அங்கீகாரமின்றி வடக்குக் கிழக்கு இணைக்கக் கூடாது என்பதை புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன் மொழிய வேண்டும் என பேராசிரியர் டொக்டர் எம்.ஏ.எம்.சித்தீக் தெரிவித்தார். கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்துக்குமான சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் “உத்தேச அரசில் யாப்பும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிமை (14-02-2016) காலை தொடக்கம் மாலை வரை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

(“கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது!” தொடர்ந்து வாசிக்க…)

அகில இலங்கை தமிழர் மகாசபை முன்வைத்த புதிய அரசியல் யாப்பு முன்மொழிவு!

நீண்டகால அரச/அரசியல் நிர்வாக அனுபவம் கொண்ட, கலாநிதி விக்னேஸ்வரன் [Dr Wikneswaran] அவர்களின் தலைமையில் அகில இலங்கை தமிழர் மகாசபை நாட்டின் அரசியல் அமைப்புக்கு தேவையான திருத்தங்களை, கடந்த 10-02-2016ல் முன்மொழிந்துள்ளது. மாவட்டரீதியாக தங்கள் ஆலோசனைகளை முன் வைக்க முடிவு செய்துள்ள அகில இலங்கை தமிழர் மகாசபை 16-02-16 இடம்பெற்ற யாழ் அமர்வின்போது மதசார்பற்ற அரசு என்ற விடயத்தில் மிக தெளிவான விளக்கத்தை முன்வைத்துள்ளது. கண்டிய ஒப்பந்தத்தில் புத்தமதம் பாதுகாக்கப்படும் என ஆங்கிலேயர் உறுதிமொழி வழங்கினர். ஆனால் அதற்கு முன்பு இலங்கையில் இருந்த மூன்று இராச்சியங்களில் யாழ்ப்பாண இராச்சியம் போத்துகீசர் வசமான போது, அது இந்து இராச்சியமாகவே இருந்தது. அதனால் ஆங்கிலேயரின் கண்டிய ஒப்பந்தம் முழு இலங்கைக்குமானதல்ல. எனவே இலங்கை [சிறீலங்கா] ஒரு மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என கலாநிதி விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

(“அகில இலங்கை தமிழர் மகாசபை முன்வைத்த புதிய அரசியல் யாப்பு முன்மொழிவு!” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!

உயர்திரு நீதியரசர் அவர்கட்கு! முதலமைச்சருக்கு என்று விளிக்காமல், பழைய ஞாபகத்தில் நீதியரசருக்கு என, நான் விளித்திருப்பதாய் நினைப்பீர்கள். அப்படியில்லாமல் தெரிந்தேதான் உங்களை, நீதியரசராய் விளித்தேன். காரணம், என்றும் நீங்கள் நீதியரசராகவே இருக்கவேண்டும் எனும், என் உள விருப்பே! அவ்விருப்புடனேயே இக்கடிதத்தை வரையத்தொடங்குகிறேன். அண்மைக்காலமாக உங்களை விமர்சித்து நான் எழுதியவற்றை வைத்து, என்னை உங்களின் பகைவனாய் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் நீங்கள் என் பகைவர் அல்லர். என் மனதில் உயர்ந்த ஒரு இடத்திலேயே, உங்களை இன்றும் நான் வைத்திருக்கிறேன். தாங்கள் உச்சநீதிமன்ற நீதியரசராய்ப் பதவி வகித்த காலத்தில், எந்தச் சமுதாய அமைப்பிலும் உறுப்பினராய் ஆக மறுத்து வந்தபோதும், என் கோரிக்கையை ஏற்று,எங்கள் கம்பன்கழகத்தின் பெருந்தலைவராய் செயலாற்ற முன்வந்தீர்கள். எங்கள் கழகத்தின் பெருந்தலைவர் பதவியில், தாங்கள் அமர்ந்ததால் நாங்கள் பெருமையுற்றோம்.

(“முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

மலின அரசியல் வேண்டாம்!

இலங்கையில், புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக, வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் இந்த கருத்தறிதல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்தே இக் கருத்தறியும் அமர்வுகளில் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சற்று அப்பால் சென்று, தமிழீழம் வேண்டும்- மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு கருத்துக்களை கூறுமாறு கருத்தறியும் அமர்வுகளுக்குச் சென்ற மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டியதாகவும் தெரியவருகின்றது.

(“மலின அரசியல் வேண்டாம்!” தொடர்ந்து வாசிக்க…)

எங்களுடைய பார்வையில் தமிழர்களில் அதிகப் பெரும்பான்மையோரினது விருப்பும் வேட்கையும் ஒரு நிலையானதும் பாதுகாப்பானதுமான வாழ்வே -பத்மநாபா EPRLF

திரு. லால் விஜேநாயக்கா தலைமையிலான அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வுகளை நேற்று 15.01.2016. யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு (தி. சிறீதரன்) தோழர் மோகன், தோழர் கிருபா ஆகியோர் மேற்படி அமர்;.வில் சமூகமளித்து பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். 40 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையில் வட கிழக்கு இணைப்பு அல்லது அதிகார பரவலாக்கத்திற்க்கான அலகு தொடர்பான கருத்துக்கள்.

(“எங்களுடைய பார்வையில் தமிழர்களில் அதிகப் பெரும்பான்மையோரினது விருப்பும் வேட்கையும் ஒரு நிலையானதும் பாதுகாப்பானதுமான வாழ்வே -பத்மநாபா EPRLF” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆலோசனைகள்

15.02.2016 ம் திகதி யாழ் கச்சேரியில் நடந்த புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா மற்றும் கடசியின் யாழ் மாவட்ட கிளையின் செயலாளர் கு. சிவகுலசிங்கம் ஆகியேரால் பின்வரும் ஆலோசனைகள் அடங்கிய மகஜர் நேரடியான விளக்கங்களுடன் கையளிக்கப்பட்டது.

(“புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆலோசனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வாசகர் கருத்து

அன்புள்ள சூத்திரம்,
மனநோயாளி மனேகணேசனின் அறிக்கையைப் போடுமளவுக்கு என்னய்யா உங்களுக்கு நடந்தது? முன்பு சூத்திரம் வாசிக்கக்கூடியதாக இருந்தது. இப்ப ஏன் இந்தப் போக்கு? புரியவில்லை. திரும்பவும் வாருங்கள் பட்டிக்கு.
– சந்திரன்
இது ஒரு வகை பத்திரிகா தந்திரோபாயம் மனோ கணேசனை அவரனின் அறிகை மூலமே அம்பலப்படுத்துவது. இது அவரின் கருத்தை ஏற்றுக் கொளவதாக அமையாது. சற்று ஆழமாகப் பார்த்ததால் புரியும் -ஆர்

மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.

(“மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)