உரையரங்கு

“சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இலங்கை பெருந்தோட்ட மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார நிலைமைகள்”

என்ற தலைப்பில் மலையகத்தைச் சேர்ந்த கல்வி மற்றும் சமூக செயற்பாட்டாளர்

திரு.எஸ்.சந்திரசேகரன் அவர்கள் உரையாற்ற இருக்கிறார்.

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் கூட்ட அறை

(150, Borough Drive, Toronto, ON, M1P 4N7)

காலம்: 2018 ஏப்ரல் 13, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை

இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயற்பாட்டிற்கான அமையம் (Centre for Creative Thoughts and Action)

தொடர்புகளுக்கு: E-Mail: creathought1@gmail.com

யாழ் மாநகர சபை செய்யவேண்டியவை

யாழ் மாநகரம் நுளம்பு குப்பைமேடு அசுத்தமான குடி நீர் நோய் எனதிணறுகிறது. குருநகர் நாவாந்துறை காக்கைதீவு பொம்மைவெளி மக்களின் அவலங்கள் சொல்லி மாளாது. ஒரு சுத்தமான கழிப்பறையை யாழ் நகரில் கண்டுபிடிக்க முடியாது. நகருக்கு வருபவர்கள் உடல் உபாதைகளை அவஸ்தைகளை சகித்தாக வேண்டும். அனால் பெரும் எதிர்பார்ப்புடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநகரசபையில் சிலர் சமாதி கட்டுவதற்கும் சிலைகட்டுவதற்கும் மிருகசாலை அமைப்பதற்கும் பரிந்துரை செய்கிறார்கள். வடக்கு மாகாண சபை போல் மாநகரசபையும் கீழ்வாந்து போய்விடக்கூடாது. மாநகர சபை 4 ந்தர கபடதாரி அரசியல் செய்யும் இடமல்ல. இந்த மாதிரி தான் ஆரம்பம் என்றால் யாரும் மாநகர சபைக்கு உதவ முன் வர மாட்டார்கள்.
இப்படியான அராஜக போக்குகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தார்மீக அற சமூக பிரக்ஞை கொண்ட உறுப்பினர்கள் பெருமளவில் மாநகர சபையில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த திருகுதாள விளையாட்டுகளுக்கு இடமளிக்க கூடாது.

(Sritharan Thirunavukarsu)

”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!” -தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-

(எஸ். ஹமீத்)

குற்றவாளியை விடுவிக்க தேசியக் கொடியுடன் ஊர்வலம்! அவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு. நிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள். அந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.
காஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.
பெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.

(“”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!” -தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-” தொடர்ந்து வாசிக்க…)

காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா

 

காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கண்டனம் தெரிவித்து, ஆவேசமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

(“காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா” தொடர்ந்து வாசிக்க…)

சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது எள்ன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக, அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் சீமான் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

(“சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசியவாதியும் நானும்

1989 இல் அச்சுவேலியைச் சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் புலி ஆதரவாளர்.தமிழப் பற்றாளர்.எனது அண்ணன் யோகசிங்கம்,அதிபர் இராசதுரை இருவருக்கும் அறிமுகமானவர்.தமிழ் இன ஒற்றுமை,பழைய தமிழர்களின்,வரலாறுகள் எல்லாம் எனக்கு கூறினார்.

(“தமிழ்த் தேசியவாதியும் நானும்” தொடர்ந்து வாசிக்க…)

பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில்…

உன்னாவ் மாவட்டத்தில்…
சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில்…

பிஜேபி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர்
அவரது சகோதரன் அதுல் சிங் இருவரும் –
பப்புசிங் என்பவரது 16 வயது மகளை
பாலியல் வன்முறை வல்லுறவுக்கு ஆளாக்கியதால்
அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

(“பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?” தொடர்ந்து வாசிக்க…)

“வெருகல் “

சகோதரர்களே ஒருவரை ஒருவர் கொன்று குதறி இரத்தத்தை குடித்து மகிழ்ந்த துயரம். வரலாற்றில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய கொலைக்களம். பிரபா-கருணா என இருவருமே வீழ்ச்சியை சந்தித்த நாள் April 10, 2004. @ On April 10th 2004, 175 Karuna cadres, including female cadres, were massacred in Verukal in an attack by the LTTE to prevent the separation. பி.கு: படம்-வடபகுதி தமிழர்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாத வாகரையில் அமைந்துள்ள வெருகல் சம்பவத்தில் கொல்லப்பட்ட கிழக்கு புலிகளின் நினைவு தூபியும். பலியான தமது உரவுகளுக்காக இந்த நாளில் அஞ்சலி செலுத்துபவர்களும்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவுக்கு இன்று (10) விஜயம் செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் மாவட்டச் செயலரிடம் கையளித்துள்ளனர்.

வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சற்று நேரத்தில், அதன் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாகரைப் பிரதேச சபையின் தலைவர் சிவஞானம் கோணலிங்கமும் உறுப்பினரான தெய்வேந்திரன் சத்தியநாதன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

(“வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)