மக்கள் மத்தியில் மீண்டும் மன்னார் ஆயர்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக தனது பணியை முன்னெடுக்க முடியாத நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் ஆராம்பமான ‘மன்னாரின் சமர் மாபெரும் மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

(“மக்கள் மத்தியில் மீண்டும் மன்னார் ஆயர்!” தொடர்ந்து வாசிக்க…)

மாவை கைவிட சுரேஸிடம் சரண் அடைந்தார் ஜங்கரநேசன்!

வடக்கு மாகாணசபையின் இன்றைய குழப்பங்களின் மத்தியில் மீண்டுமொரு முறை தனது அரசியல் சாணக்கியத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன். வடமாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் நான்கு அமைச்சர்களையும் தமிழரசுக்கட்சி தன்னுடைய எதேச்சதிகார திமிருடன் தெரிவு செய்திருந்தது. இதனால் கூட்டமைப்பு பெயரளவிலா என அப்போது கேள்வி எழுப்பிய அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆ.எல்.எவ் தனக்கு கிடைக்கவேண்டிய அமைச்சுப் பதவியையும் தமிழரசுக் கட்சியே எடுத்துக் கொண்டாதாகவும் அதனால் தமது கட்டுப்பாட்டுகளை மீறி தமது கட்சியை சேர்ந்த ஐங்கரநேசன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிவித்து ஐங்கரநேசனை தமது கட்சியை விட்டு நீக்கியிருந்தது. இந்நிலையில் ஐங்கரநேசன் தமிழரசுக்கட்சியின் செல்லப் பிள்ளையாக மாறியதுடன் மாவை சேனாதிராசாவின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறியுமிருந்தார். தனது முந்தைய தலைவரான சுரேஸ் தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அப்போது முன்வைத்து வந்துமிருந்தார்.

(“மாவை கைவிட சுரேஸிடம் சரண் அடைந்தார் ஜங்கரநேசன்!” தொடர்ந்து வாசிக்க…)

மார்ச் 17ல் அரசியல் அமைப்பு வரைவு நிறைவு பெறும்!

இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான வடமாகாணசபையின் குழு மார்ச் மாதம் 17ம் திகதி தமது வரைபை நிறைவு செய்யும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக வடமாகாண சபையினால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோரின் கூட்டு தலமையில் 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருந்தது.

(“மார்ச் 17ல் அரசியல் அமைப்பு வரைவு நிறைவு பெறும்!” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவ பிரசன்னம் படிப்படியாக நீக்கப்படும்?! ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற பூசை விழாவின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.  வட மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதையும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.  அதிகாரப் பகிர்விற்கு 13ஆம் திருத்தம் சிறந்த தீர்வு என்று கருத்துத் தெரிவித்த ரெஜினோல்ட் குரே அரசியலமைப்பின் பிரகாரமே தமக்கு கடமையாற்ற முடியும் என்று கூறியதுடன் அதற்கமைய 13ஐ பெறுவதில் உள்ள தடைகளை நீக்க முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் மற்றும் டிசேட் அணிந்து வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தாடியுடன் விரிவுரைகளுக்கு வருவதும் தடை செய்யப்படுவதாகவும், மாணவிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புடவை அணிந்து விரிவுரைகளுக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன், இவை பேரவையில் எடுக்கப்பட்ட முடிவாகவும் கூறப்பட்டது.

(“புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்!” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பில் தமிழ் யுவதிகள் முஸ்லீமா..? நடப்பது என்ன…?

மட்டக்களப்பில் புனித இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக்காரணம் வறுமையே எனத்தெரியவருகின்றது. வறுமையின் நிமித்தம் காரணமாக கடைகளில் வேலை செய்யும் யுவதிகள் முஸ்லிம் இளைஞர்களை காதலிப்பதுடன் அவர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயம் புனித இஸ்லாத்தை தழுவவேண்டியேற்படுவதாக அண்மையில் ஏறார் கடையொன்றில் வேலைசெய்துஇஸ்லாத்துக்கு மாறிய பன்குடாவெளியைச்சேர்ந்த 22 வயது யுவதியொருவர் தெரிவித்தார். அத்துடன் நாம் வறுமையிண் வாடுகின்றோம் எமது ஆலயங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன இச் சொத்தினை எம்மைப்போன்ற ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாமே? பள்ளிவாசல்கள் செய்யும் வேலையினை ஏன் எமது ஆலயங்கள் செய்யக்கூடாது என கேள்வி எழுப்புகின்றனர்.

(“மட்டக்களப்பில் தமிழ் யுவதிகள் முஸ்லீமா..? நடப்பது என்ன…?” தொடர்ந்து வாசிக்க…)

வடமராட்சி கிழக்கில் கண்டனப் பேரணி – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ் மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் மற்றும் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம், வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சிக் கிழக்கின் ஏனைய பொது அமைப்புகளான தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் சேர்ந்து மேற்கொண்ட இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சனைகளை முன்னிறுத்தி கோசங்களை எழுப்பினர். காலை 10:30 மணியளவில் தாளையடி கடற்கரை மாதா கோவிலடியில் ஆரம்பித்த இவ் எதிர்ப்புப் பேரணியானது ஊர்வலமாகச் சென்று மருதங்கேணி பிரதேச செயலகத்திக் முன்னால் பெரும் கோசங்களுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் நிறைவு பெற்றது.

(“வடமராட்சி கிழக்கில் கண்டனப் பேரணி – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அம்புலன்ஸ் சேவையுடன் ‘ரோவும்’ வந்துவிடும்!

இந்திய தனியார் நிறுவனத்தின் அம்பூலன்ஸ் சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டால், இந்திய உளவுச் சேவையான ரோ இலங்கையில் சுயாதீனமாக செயற்பட தொடங்கிவிடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். குறித்த அம்பூலன்ஸ் சேவையில் ஈடுபட சேர்த்துக் கொள்ளப்படவிருப்பவர்கள், இந்தியாவுக்கு சார்பானவர்களாகவே இருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை பொறுத்தவரை அங்கு மோசமான சுகாதார சேவையே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் குறித்த அம்புலன்ஸ் வண்டிகள் இந்திய பாதைகளுக்கு பொருத்தமானவையல்ல. இதேவேளை இலங்கையில் குறித்த அம்பூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பை இலங்கையின் சுகாதார அமைச்சு கொண்டிருக்காது என்றும் விமல் வீரவன்ன தெரிவித்துள்ளார் இதிலிருந்து இலங்கை பெரிய அண்ணனாக செயற்படும் இந்தியாவுக்கு தமது பொருளாதாரத்தை அர்ப்பணிப்பதை காண முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jaffna Central Old boys

Pls see amended programs for Old Boys Week from 09th of March to 20th of March. [ we have received lots of proposals and act from that]
Kind regards
N Thamil
** Norway is happy to support all the cost, if we all can put few Volley ball Teams play on evenings, and if anyone can organize Basket Ball also. We are happy to accommodate
[ Flood Light]****

(“Jaffna Central Old boys” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த முகவருக்கு இடமாற்றம்!

மஹிந்த அரசினது முக்கிய முகவராக இருந்து யாழ் தொழில் நுட்பக்கல்லூரியில் செயற்பட்டு வந்த அதன் அதிபர் என். யோகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அசைக்க முடியாததொரு நபராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய முதல் இராணுவ அதிகாரிகள் வரை நெருக்கமாக இருந்து வந்திருந்த யோகராஜன் தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு படுதோல்வியும் அடைந்திருந்தார். இந்நிலையில் தொழில்நுட்பக்கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ் தொழில் நுட்ப்பக்கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜன் இன்று (26) திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்திற்காக தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்கும் சதி முயற்சியிலும் இணைந்து செயற்பட்டிருந்த அவர் படையில் கூலித்தொழிலாளிகளாக இணைப்பதற்கான மையமாக தொழில்நுட்பக்கல்லூரியை பயன்படுத்த அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.