கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நீண்டகாலத் திட்டங்கள், ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
Category: செய்திகள்
‘பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை’
‘யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நீலக்கடலானது குருநாகல்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய மாநாடு மாலை 5.30க்கு நிறைவடைந்தது.
முன்னாள் புலியை நாடு கடத்த முடிவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சுதன் சுப்பையா என்பவரை நாடு கடத்துவதற்கு இந்தியா, நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னையில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயம் அறிவித்துள்ளது. போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி, வெளிநாடொன்றுக்கு பயணிப்பதற்கு தயாராக இருந்த நிலையிலேயே இந்தியப் பொலிஸாரினால், அவர் கைது செய்யப்பட்டார். அவர், மாரிமுத்து என்ற பெயரில் 2005ஆம் ஆண்டுவரையிலும் மாரிமுத்து எனும் பெயரில், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினராக செயற்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் போராட்டத்தை மோசமாக எதிர் கொண்ட இலங்கை அரசு
தனியார் மருத்துவக் கல்லூரியை (மாலாபே) மூடு! தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம்! இலவசக் கல்வியை உறுதி செய்! கல்வி விற்பனைப் பண்டம் அல்ல! ஆகிய கோசங்களை முன்வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மாணவர் போராட்டத்தின் இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர்கள் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் முன்னெடுத்திருந்தன. ஆர்ப்பாட்டம் கொள்ளுபிட்டியில் வைத்து அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தண்ணீர் தாரகை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. மாணவர் போராட்டதை இம்முறையில் எதிர் கொள்ளும் இலங்கை அரசு கண்டனத்திற்குரியது தமிழ் மாணவர்களே நீங்களும் நிச்சயமாக இந்தப் போராட்டதில் இணைய வேண்டும். இது எதிர்காலத்தில் நீங்கள் சம உரிமையுடன் இலங்கையில் வாழ வழிவகுக்கும்.
https://www.facebook.com/FreeEducationSL/videos/1375421535821359/
மரண அறிவித்தல்
திருகோணமலை மூதூர் கடற்கரைச்சேனையைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்திடல், தம்பலகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு திருநாவுக்கரசு அவர்கள் 01.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் 1980களில் திருகோணமலை மாவட்டத்தில் காந்தீயத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும், மூதூர் பகுதி காந்தீய பொறுப்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் புளொட்டின் ஆரம்பகால உறுப்பினராகவும், மூதூர்ப் பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டவர்.
1980களில் இருந்தே காந்தீயம், புளொட் ஆகியவற்றின் செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு தனது குடும்பத்தையும் பங்கெடுக்கச் செய்த அமரர் திருநாவுக்கரசு அவர்கள் மறைந்த தோழர் பார்த்தன் (இரா.ஜெயச்சந்திரன்) அவர்களோடு தோளோடு தோள்நின்று செயற்பட்டவர்.
மரண அறிவித்தல்
அருட்சகோதரி மேரி ஒலிவியாயோசப்
(ஆசிரியர், யாழ்ப்பாணம் மடு(சுப்பீறியர்), நுவரெலியா மட்டக்கலை, பிலிப்பைன்ஸ், கொழும்பு பேசாலை, வவுனியா, மன்னார்)
அன்னை மடியில் : 20 ஓகஸ்ட் 1937 — ஆண்டவன் அடியில் : 30 ஓகஸ்ட் 2016
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஒலிவியாயோசப் அவர்கள் 30-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் சின்னத்துரை(ஆசிரியர்- ஆயுர்வேத மருத்துவர்) மேரி திரேஸ் அமிர்தம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
றூபி, ஜெயமணி, ராஜசூரியர், காலஞ்சென்ற ஜெயராசா, Dr. ஜெயரட்ணம், ஜெயபாக்கியம், காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயமலர், காலஞ்சென்ற ஜெயந்திரா, ஜெனிற்றா, சபின்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அல்பிறட், கனகரத்தினம், ஜெயராணி, மற்றும் பற்றீசியா, லெனிற்றா, காலஞ்சென்ற நடேசன், இன்பராணி, ஜெயந்திரா, யோகவதி, காலஞ்சென்ற செல்வரட்டிணம், திரேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தி, சாந்தி, மோகன், வசந்தன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
கேமா, பிறேமா, நிசாந்தன், வினோ, நிலோஜன், ஒக்ஸ்மன், ஜொஸ்லின், ஸ்ரெவான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராகிணி, காலஞ்சென்ற ரோகிணி ரஞ்சன், ஜீன், ஜோய், ஜீன், ஜெனி, ஜெசி, லக்ஸ்மன், ரஞ்சித், பூர்ணிமா, சுதர்ணிமா, தர்சிணிமா, கிறிஸ்நிமா, பிரியநிமா, ரெமின்ரன், தயான், பிரியா, கமிலஸ், டியோனிஸ், டிலோன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-09-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr. ஜெயரட்ணம்(சகோதரர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61398461742
ஜெனிற்றா(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4924318057714
ஜெயமலர்(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4925063952
ஜெயபாக்கியம்(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +492507982287
வசந்தி(பெறாமகள்) — பிரித்தானியா தொலைபேசி:+442083576004
கென்னடி விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு
அமெரிக்கா புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துக்கு சொந்தமான பால்போன் 9 (Falcon 9) என்ற ரொக்கெட் வரும் சனிக்கிழமை கென்னடி இருந்து செலுத்தப்படுகிறது. இந்த ரொக்கெட் அமோஸ் 6 என்ற செயற்கைக்கோளை சுமந்த செல்ல இருக்கிறது.
(“கென்னடி விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை ‘நாடாளுமன்ற சதிப்புரட்சி’
பிரேஸிலின் ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள டில்மா றூசெப், தவறெதனையும் தான் செய்திருக்கவில்லை என்பதை மீள வலியுறுத்தியுள்ளதோடு, பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமையை, “நாடாளுமன்ற அரசியல் சதிப்புரட்சி” என்று வர்ணித்துள்ளார். அத்தோடு, பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக, இருக்கக்கூடிய அனைத்து சட்டவழிகளிலூடாகவும் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
(“ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை ‘நாடாளுமன்ற சதிப்புரட்சி’” தொடர்ந்து வாசிக்க…)
ஜெயலலிதாவின் மகள்? இவர்தான் அவரின் அரசியல் வாரிசு?
(“ஜெயலலிதாவின் மகள்? இவர்தான் அவரின் அரசியல் வாரிசு?” தொடர்ந்து வாசிக்க…)