மியான்மார் அதிகார மாற்றத்தைப் புகழ்கிறார் ஜனாதிபதி

மியான்மாரின் ஆட்சி அதிகாரத்தை மாற்றும் செயற்பாட்டை, வெற்றிகரமானது என, ஜனாதிபதி தெய்ன் செய்ன் புகழ்ந்துள்ளார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை, ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியிடம் வழங்குவதற்கு முன்னர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவ ஆட்சியின் கீழ், பல தசாப்தங்களாகக் காணப்பட்ட மியான்மார், ஆங் சாங் சூகியின் வெற்றியைத் தொடர்ந்து, மாபெரும் ஜனநாயக மாற்றமொன்றை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

(“மியான்மார் அதிகார மாற்றத்தைப் புகழ்கிறார் ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

உலக நடப்பும் ஊரவன் விருப்பும்!!!

உலக நடப்பு:

எரித்திரிய நாட்டில் ஒருஆண் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என அரசு கடும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டில் ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருப்பதால்தான் இந்த உத்தரவு. எரித்திரிய நாட்டின் மொத்த சனத்தொகை நான்கு மில்லியனாகும்.1998 – 2000ம் ஆண்டுவரை நடைபெற்ற யுத்தத்தில் ஒருலட்சத்து ஐம்பதுஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்தால் ஆண்களின் தொகை குறைந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை செய்த அரசு இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யும் ஆண்களுக்கு பண உதவி மற்றும் வீட்டுவசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

(“உலக நடப்பும் ஊரவன் விருப்பும்!!!” தொடர்ந்து வாசிக்க…)

யேமனில் சிவிலியன்களைத் தாக்கியது சவூதி

சவூதி தலைமையிலான கூட்டணி, யேமனிலுள்ள பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததாகத் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, அக்கூட்டணியின் சில தாக்குதல்கள், மனிதத்துக்கு எதிரான குற்றமாக அமையக்கூடுமெனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையிலேயே, இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சவூதி தொடர்பான அறிக்கையில், கூட்டணியின் 119 தாக்குதல்கள் ஆவணப்படுத்தப்பட்டு, அவை, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மீறல் தொடர்பிலானவை எனக் குறிப்பிடத்தப்பட்டுள்ளது. பல தாக்குதல்கள், பொதுமக்கள் இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல் விமானத்தாக்குதல்களாக அமைந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“யேமனில் சிவிலியன்களைத் தாக்கியது சவூதி” தொடர்ந்து வாசிக்க…)

றொக்கெட் ஏவுதலுக்குத் தயாராகிறதா வடகொரியா?

றொக்கெட்டொன்றை ஏவுவதற்கு, வடகொரியா தயாராகி வருகிறதாவென்ற சந்தேகத்தை, அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். செய்மதிப் படங்களின் உதவியுடனேயே, இந்தச் சந்தேகத்தை அவர்கள் விடுத்துள்ளனர். வடகொரியாவின் செய்மதி ஏவும் இடமென வடகொரியா விவரிக்கின்ற இடமொன்றில், காணப்படும் அதிகளவிலான போக்குவரத்துக் காணப்படுவதாலேயே, இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள், ஏவுகணை தொடர்பாக உபகரணங்களும், எரிபொருட்களும், அதிகளவிலான போக்குவரத்தும் காணப்படுவதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்

அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி முதல் ஏற்பட்டு வரும் நிலவெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (27) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

(“நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை(27) விடுவிக்கப்பட்டனர்.

(“புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவை இணைக்க மைத்திரி இணக்கம்

சு.கவின் உடைவைத் தடுக்க பகிரதப் பிரயத்தனம்

சந்திரிகா தொடர்ந்தும் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க சுதந்திரக் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் ஐ. ம சு. மு. கூட்டுக் கட்சியிலுள்ள சிலரும் இணைந்து தனியாக கட்சியமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்க முயலும் நிலையில் கட்சி உடைவதை தடுப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

(“மஹிந்தவை இணைக்க மைத்திரி இணக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

“சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்!

சின்ன மாமியே பாடலுக்குச் சொந்தக் காரரான கமலநாதன் மாஸ்டர் காலமான செய்தியை அறிந்தேன். அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். ஒரு காலத்தில் இன்னாரின் பிள்ளை இவர் என்று சொல்லப்படும் பிள்ளை பிரபலமானதும் அப் பிள்ளையின் தாய் தான் இவர், தந்தை தான் இவர் என்று மாறுவது இன்றைய உலக வழமை. ஊடகத்துறையில் ஒலிபரப்புத்துறையில் என்னுடன் பணியாற்றிய இளம் ஒலிபரப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் நான் கண்ட சமூக அனுபவம் இது. எமக்குத் தெரிந்த விளையாட்டுத்துறையில் பிரபலமான கமலநாதன் மாஸ்டரை பொப் பாடல் சின்ன மாமியே புகழ் கமலநாதன் மாஸ்டர் என்று சொல்லவேண்டிய நிலைக்கு ஊடக ஜனரஞ்சகம் நம்மை மாற்றியுள்ளது. அவர் பிறந்த வதிரிக் கிராமத்திற்கு அயல் கிராமமான கரவெட்டியில் பிறந்து வளர்ந்து அக் கிராமத்துடனும் இணைந்து வாழ்ந்தவன் என்ற வகையில் அவருடைய பிரிவில் சில குறிப்புக்களை இங்கு பகிர விரும்புகிறேன்.

(““சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

(“புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை” தொடர்ந்து வாசிக்க…)