அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல்

அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல், முன்னொருபோதும் இல்லாத‌வாறு ப‌ல‌ திருப்ப‌ங்க‌ளை கொண்டு வ‌ர‌வுள்ள‌து. ஹிலாரி கிளின்ட‌ன் தேர்த‌ல் செலவுக‌ள் ப‌ற்றிய‌ இர‌கசிய‌ ஆவ‌ண‌ங்க‌ள் வெளியிடப் ப‌டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவ‌ன‌ர் ஜூலிய‌ன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

(“அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்து வாசகர்களிடையே….

ஈழத்து வாசகர்களிடையே அல்லது படைப்பாளிகளிடையே ஜெயமோகன் சாருநிவேதா, மனுஷ்ய புத்திரன் ஆகியோரது எழுத்துக்களைப் படிப்பது அல்லது அவர்களையிட்டுப் பேசுவது ஓர் அந்தஸ்த்துக் குறியீடாக (status of sympolic) இருக்கின்றது. உண்மையில் இவர்கள் எழுத்துக்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தினவா?

(“ஈழத்து வாசகர்களிடையே….” தொடர்ந்து வாசிக்க…)

2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)

திருகோணமலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி அறைகூவல்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (07.08.2016) திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடைய காங்கிரஸ் கடந்த ஏப்ரல் மாதம் கூடி அந்த கட்சியின் பெயரை தமிழ் சமூக ஜனநாயக கட்சி என பெயர் மாற்றம் செய்து வடக்கு கிழக்கு எங்கும் வட்டாரங்கள் தோறும் அடிப்படைக் கிளைகளை அமைத்து ஒரு பரந்து பட்ட மக்களின் கட்சி ஒன்றை கட்டி எழுப்புதல் என்ற தீர்மானம் எடுத்திருந்தது. அதன் பிறகு தமிழர் சமூக ஜனநாயக கட்சியை ஒரு புதிய அரசியல் கட்சியாக பதிவதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையாளருடன் பேச்சு வார்த்தையும் நடாத்தப் பட்டிருக்கின்றது. மிக விரைவில் அந்த பதிவுக்கான முறையான விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். அதற்கான பதிவு மிகவிரைவில் நடைபெறும் என்று நம்புகின்றோம்.

(“2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம்!

 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக பெயர் மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உணரும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும், இதேவேளை, அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தை கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எப்

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியானது, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதன் புதிய மத்திய குழு நிர்வாகிகளுக்கான முதலாவது கூட்டம், திருகோணமலை கடற்காட்சி வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரும் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அ.வரதராஜப்பெருமாளும் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியைப் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் விரைவில் பதிவு நடைபெறுமெனவும் கூறினார்.

(“ஈழத்தை கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எப்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் போதே எமது நாடு இந்தியாவின் கீழ் செயற்பட வேண்டிய நிலையை தோன்றிவிட்டது. எமது நாட்டின் சுயாதீன தன்மையும் இல்லாது போய்விட்டது. எனவே தற்போது ஹனுமான் பாலம் அமைத்தால் இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும் அச்சுறுத்தலான நிலைமை தோன்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

(“இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும்” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனுக்கு மகிந்த 8,000 இலட்சம் ரூபா வழங்கினார் ஆதாரம் அமைச்சர் கையில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கவில்லை என்றால், அதனை அச்சமின்றி நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். மகிந்த ராஜபக்ஷ, தனது சகோதரர் பசில் ராஜபக்ஷ மற்றும் கொழும்பில் இருந்து சேறுபூசும் புலியான டிரான் அலஸும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கினர். இதனை நாங்களும் அறிந்திருக்கவில்லை.

(“பிரபாகரனுக்கு மகிந்த 8,000 இலட்சம் ரூபா வழங்கினார் ஆதாரம் அமைச்சர் கையில்” தொடர்ந்து வாசிக்க…)

உறுதி… உறுதி… உறுதி… How many times “உறுதி…?”

 

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அரசு தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், சிறைக் கைதிகளிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார்…

(“உறுதி… உறுதி… உறுதி… How many times “உறுதி…?”” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி

வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக, பொதுமக்களால் பல குற்றச்சாட்டுகள், முதலமைச்சரிடம் ஆதாரங்களுடன் கையளிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொது நூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின்; ஐந்தாவது கூட்டத் தொடரின் பின்னர், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

(“வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி” தொடர்ந்து வாசிக்க…)

இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி

வடக்கிலும் கிழக்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான கூட்டங்களில், வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பிலான யோசனைக்கு, ஏட்டிக்குப் போட்டியான வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

(“இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி” தொடர்ந்து வாசிக்க…)