அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்?

(காரை துர்க்கா)
தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் (புதிய)குடியுரிமைச் சட்டம் இலங்கை தமிழருக்கு நன்மைகளை ஏற்படுத்துமா…?

(சாகரன்)

மோடி அரசின் மத்திய உள்துறை அமைச்சர் அமிர்த்ஷா இனால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடு தழுவிய ரீதியில் எதிர்பலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. குடியுரிமை சட்டத்தில் பொதுமையாக இஸ்லாமியரை தள்ளி வைத்தல், இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்குவதை தவிர்த்தல, மியான்மார் ரோங்கிய முஸ்லீம்களை அகதிகளாகவோ அல்லது குடியுரிமை வழங்கலுக்குள் தவிர்தல் என்ற போக்குகள் உள்ளாகியிருப்பது எதிர்பலைகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு.

சாதிய வெறி

(Pushparani Sithampari)

இலங்கைத்தமிழர்களிடையே சாதிவெறி ஒழியவில்லை என்பதுபற்றி நானே நிறைய எழுதியிருக்கின்றேன். இன்னும் எழுதுவேன். ஆனால் தமிழ்நாட்டைவிட அதிகம் என்பதை மறுக்கின்றேன். தமிழ்நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருப்பதுபோல சாதிவெறியில் படுகொலைகள் செய்வது இப்போது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

தாது வருடப் பஞ்சம்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது –

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது –

மனிதம் இங்கும் வாழ்கின்றது

எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .

அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .

அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் .
தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.

“எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதா தண்ணீரை ஊற்றி அணைப்பதா”

(கருணாகரன்)
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிறகு, கிளிநொச்சிக்குச் சில சிங்கள நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய வருகையின் நோக்கம், “மதக வன்னி” (Mathaka Wanni) என்ற என்னுடைய சிங்களப் புத்தகத்தைப்பற்றிய உரையாடலைச் செய்வதும் என்னைச் சந்திப்பதுமே. ஆனால், பேச்சு அரசியற்பக்கமாகவும் திரும்பியது. அப்பொழுது அவர்களிடம் கேட்டேன், “ஜனாதிபதித்தேர்தலின் முடிவுகளைப்பற்றி உங்களுடைய பார்வை என்ன? சிங்கள மக்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?” என்று.

மத்திய தரைக்கடல் பகுதியில் பாரிய யுத்தம் ஏற்படும் அபாயம்.

(M.N. Mohamed)

துருக்கி ஐ.நா அங்கீகரித்த லிபிய அரசுடன் ஒப்பந்தம் செய்து மத்தியதரைக் கடலின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்து சில மணி நேரத்துக்குள் லிபியாவின் யுத்தப் பிரபு கலீபா ஹப்தாரின் படைகள் லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக பாரியயுத்தமொன்றை ஆரம்பித்துள்ளது.