பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Category: செய்திகள்
ஆவணங்களில் கையெழுத்திட்டார் பெசில்
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.
துமிந்த நாகமுவ கைது
முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 02 இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறாத போதும், சம்பவ இடத்திலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருடன் இருந்த துமிந்த நாகமுவவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசில் இருந்து: ‘வெளியேறுவோர் வெளியேறலாம்’
இலங்கை: கொரனா செய்திகள்
‘பசிலுடன் பங்காளிகள் விரைவில் சந்திப்பர்’
‘7 பேர் விடுதலையில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது’
சீனா கௌவிய கௌதாரி: வளங்களும் நலன்களும் பாதிப்பு
தொடர்ந்து அச்சத்தில் ஏறும் இலங்கை ரூபாய்
பத்து நாட்களுக்குள் இலங்கை அரசாங்கம் வரலாற்றுச் சாதனையாக ரூ. 231.5 பில்லியனை அச்சிட்டுள்ளது. ஏல விற்பனையின் போது திறைசேரி பத்திரங்கள் விற்பனையாகாததன் காரணமாக, அவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தப் பணம் அச்சிடப்பட்டிருந்தது. இவ்வாறு ரூபாய் அச்சிடப்படுவது இந்த ஆண்டில் முதன் முறையாக இடம்பெறவில்லை என்பதுடன், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் பொருளாதார வல்லுநர்கள் கடும் எச்சரிக்கையையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.
இலங்கை: கொரனா செய்திகள்
இலங்கை கொள்வனவு செய்த முதல் தொகுதி பைஸர் தடுப்பூசி இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட 26,000 பைஸர் தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின் மூலம் அதிகாலை 2.15 அளவில் இலங்கையை வந்தடைந்தன.