சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்

சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

40 நிலையங்களுக்கு மீண்டும் அனுமதி

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குறித்த எரிபொருள் நிலையங்களின் சேவைகளுக்கு ஒருவாரத்துக்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 ஆம் திகதியுடன் வாரம் நிறைவடையவுள்ளதால் 12ஆம் திகதி முதல் எரிபொருள் முற்பதிவுகள் வழங்கப்படும் என்று தெரியவருகிறது.

அமைச்சரவையில் டக்ளஸ் அதிருப்தி

வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின்  வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிருப்தி வெளியிட்டார்.

பலஸ்தீன மேற்குக் கரை மற்றும் காஸா போன்று மாறிவரும் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை

இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்கிறது. பலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல், முழு நகரையும் உரிமையாக்க முற்படுவதை அங்கீகரித்துள்ள அமெரிக்காவும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு இலட்சம் யூதர்கள் குடியேற்றப்பட்டதைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சட்டங்களின்படி இக் குடியேற்றங்கள் தவறு என்றும் அமைதிக்குத் தடையாக உள்ளதாகவும் பலத்தீனம் கூறினாலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மறுக்கின்றது.

பலருக்கும் மது கசந்தது

இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ​ரூபாவினால் குறைந்துள்ளது என கலால் திணைக்கள அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா?

(ச.சேகர்)

அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.

உள்ளூர் அதிகார சபைக்கான வாக்காளர்களின் மேன்மையான கவனத்திற்கு!

பிரதேச சபை அல்லது நகர சபை அல்லது மாநகர சபை இவை மூன்றும் இந்த ஒற்றையாட்சி அரசியலமைக்குள் சுதந்திரமான இயங்குநிலையைக் கொண்டிருப்பவையாகும்.

நானும் ஹிஸ்புல்லாஹ்வும்..!

(Slm Hanifa)


1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தேர்தலில் குதிக்கிறார். அவரைத் தலைவர் அஷ்ரப் அவர்களிடம் நானே அறிமுகம் செய்து வைக்கிறேன்.

இலக்கிய ஆய்வுக்குப் புதிய பாதை அமைத்தவர்!


(இராம. சுந்தரம்)

‘எனது வகுப்பு மாணவர்களில் பலர் பரலோகம் செல்வதற்காகச் சுளுவான வழியைக் கண்டு பிடித்தார்கள். அவர்களிடம் தேவாரம் திருவாசகம்,பைபிள், குர்ஆன் இருக்கும். அவர்களுள் வித்தியாசமான ஒரு மாணவன் இருந்தான். அவன் சமூக, விஞ்ஞான ஆய்வு நூல்களை வைத்துக்கொண்டு பூலோகத்தைப் பார்க்கத் தலைப்பட்டான் அவர்களோ வானம் பார்த்த பூலோகவாசியானார்கள். இவன் பூலோகம் பார்த்த சமூக விஞ்ஞானியானான்’.