இலக்கிய ஆய்வுக்குப் புதிய பாதை அமைத்தவர்!


(இராம. சுந்தரம்)

‘எனது வகுப்பு மாணவர்களில் பலர் பரலோகம் செல்வதற்காகச் சுளுவான வழியைக் கண்டு பிடித்தார்கள். அவர்களிடம் தேவாரம் திருவாசகம்,பைபிள், குர்ஆன் இருக்கும். அவர்களுள் வித்தியாசமான ஒரு மாணவன் இருந்தான். அவன் சமூக, விஞ்ஞான ஆய்வு நூல்களை வைத்துக்கொண்டு பூலோகத்தைப் பார்க்கத் தலைப்பட்டான் அவர்களோ வானம் பார்த்த பூலோகவாசியானார்கள். இவன் பூலோகம் பார்த்த சமூக விஞ்ஞானியானான்’.