கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.
முடக்கப்படுமா நாடு?
நீட் விலக்கு விவகாரம் – ஆளுநர் மாளிகையை முற்றுகையிட தயாராகும் கட்சியினர்
நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதுதொடர்பான விரிவான விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.
ஆளுநரின் முடிவைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில்,
மலையக – தாயக திரும்பியோருக்கான இயக்கத்தின் நோக்கம் குறித்து சில குறிப்புகள்
பிரிட்டிசாரின் வருகையும் தமிழர்கள் வெளியேற்றமும்.
வணிகத்துக்காக வந்த பிரிட்டிசார் இந்திய நாட்டைத் தமது காலனி நாடாக ஆக்கினர். நாட்டை ஒட்டச் சுரண்ட அனைத்துவகையிலும் உரிமை மீறலைக் கையாண்டனர். மூலதனத்தைக் குவிக்கத் தொடங்கியவர்களின் பசித்தீரவில்லை. அதை மென்மேலும் பெருக்கிக்கொள்ள தமது ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளில் பயிர் உற்பத்தியில் ஈடுபடுத்த, இந்தியாவில் இருந்து மக்களை கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பக்க விளைவுகள் ஐந்து மடங்கு அதிகரிக்கும்
கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியை டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி இதை தெரிவித்தார். தடுப்பூசியை பெறும் போது வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகளே ஏற்படும். மேலும், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது எனவும் டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டை வெடிக்கவைத்து உயிரிழப்பு. அமெரிக்க படையால் சுற்றிவளைக்கப்பட்டார்
அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினர் சிரியாவின் மேற்குபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி கொல்லப்பட்டுள்ளார்.
தங்களது படைகளால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டைவெடிக்கவைத்ததாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் இதன்போது கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடற்ற நகரம்
(Rathan Ragu)
கடந்த சில வருடங்களாக ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள நகரங்கள் நட்புரீதியான ஓர் இணைப்பை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நகரங்களுடன் ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் லண்டன்-இங்கிலாந்தின் புறநகரமான நியு மோல்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான நட்பு இணைப்பைப் பற்றிய செய்திகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகின. 2017 தை 14 அன்று ரொரன்ரோ நகரின் வட கிழக்கில் அமைந்துள்ள மார்க்கம் நகரம் முல்லைத்தீவு நகரத்துடன் ஓர் நட்பு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதே போன்று ரொரன்ரோ நகரம் கிளிநொச்சி நகரத்துடன் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் அரசியல் மூலோபாய, தந்திரோபாய அரசியலின் தேவை (பகுதி2)
(வி. சிவலிங்கம்)
போரிற்குப் பின்னதான தாக்கங்களும், மாற்றங்களும்
சமீப காலமாக தமிழ்த் தேசியம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில் வெறுமனே கனவுகள் அல்லது அபிலாஷைகள் போன்றன மட்டும் சமூக மாற்றத்தைத் தருமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கடல் வளம், விவசாய நிலங்கள், இளைஞர் தொகை, வெளிநாட்டு வருமானம் போன்றன இருப்பதாக கூறுவதன் மூலம் மாற்றம் ஏற்படுமா? தமிழ்த் தேசியம் என்பது சமூகத்தின் பல்வேறு கூறுகளை இணைக்கும் அடிப்படைகளைக் கொண்டிருத்தல் அவசியம், அதற்கான பொது அடிப்படைகள் குறித்த விவாதங்கள் தேவை. அவ்வாறாயின் தமிழ் சமூகத்தின் இன்றைய இருப்புக் குறித்த தெளிவான ஆய்வு அவசியம். குறைந்த பட்சம் கிடைக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான குறைந்தபட்ச மதிப்பீடாவது அவசியம்.
தனித்துவம் மிக்க தேசிய கொடி
(என்.மிருணாளினி)
சுதந்திர தினமான இன்று, எமது தேசிய கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த எமது தேசத்துக்கு, 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் கிடைத்தது. அடிமைத்தனத்தில் இருந்து எமது தேச மக்களுக்கு விடுதலை கிடைத்தது. அன்றைய தினம் தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. எமது மக்கள் அனைவரும் தேசிய கொடியைத் தம் வீடுகளிலும் வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும், பறக்கவிட்டு மரியாதை செய்கின்றனர்.
சுதந்திர தினத்தின் மகத்துவம் அர்த்தப்படும் புரிதல்
(நளீர் அஹமட்)
இத்தேசம், 15 ஆம் நூற்றாட்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இருந்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, அந்நிய ஆதிக்க ஆட்சியலிருந்து சுதந்திரம் பெற்றது.