தலிபான்களின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியிருந்த நிலையில், தங்களது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுமென பயந்த அரச ஊழியர்கள் அலுவலகங்களை விட்டுவிட்டு வீடுகளுக்கு சென்றிருந்தனர். 

பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு தலிபான்கள் வலியுறுத்து

தமது வெற்றி மகத்தானது என்று கூறும் தலிபான் தலைவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள், நாடு தமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென்று உறுதியளித்துள்ளனர்.

பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன. “ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 2,428  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 368,011 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,188 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 316,528 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 44,720 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 171 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  6,434 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தில் 45,000 கொரோனா தொற்றாளர்கள்

மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இதுவரை 45,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும் இப்போதைக்குப் பாதிக்கப் போவதில்லை.

ஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய நகரங்களை நாளையிலிருந்து (19) ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு,வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நியூசிலாந்தில் முழு முடக்கம்

ஒரு புதிய கொவிட் -19 இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு தழுவிய முழுமையான பூட்டுதலை நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். இந்த புதிய தொற்றாளர்கள் ஒக்லாந்தில் இனங்காணப்பட்டார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

’நெருக்கடியை தீருங்கள்’ மன்றாடுகிறது மன்றம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரால் ஏற்படும் நெரிசல் காரணமாக வைத்தியசாலை அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரம், இன்று (17) மேற்கொள்ளப்பட்டது. வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களம் ஆகியன இணைந்து, இந்த பிரசார நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுப்புக்குளம், அளம்பில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சேதனப்பசளை ஊக்குவிப்புத் தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.