இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் பரவிக்கொண்டிருக்கும் ​கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு, கிடுகிடுவெ அதிகரித்து செல்கிறது என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 61 ஆக அதிகரித்துள்ளது.

ரிஷாட்டின் வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணும் வன்புணர்வு

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23) தெரிவித்தார்.

தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து 650 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த தேயிலையின் அளவில் 10 சதவீத அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 137 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி முன்னெடுத்திருந்த ஆய்வின் பிரகாரம், 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஜுன் மாத தேயிலை ஏற்றுமதியினால் அதிகளவு ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த ஏற்றுமதி பெறுமதியை ஜுன் மாதத்தில் பதிவு செய்திருந்தது.

பெண்களைக் காக்க வருகிறது ‘பிங்க்‘

கேரளாவில் கொரோனா ஊரடங்குக் காலம் தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில்  பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி  ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். 

இலங்கை: கொரனா செய்திகள்

2 மில்லியன்  சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

’இந்தியாவுக்கு பாதகமாக செயற்படமாட்டேன்’ – டக்ளஸ் தேவானந்தா

நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ தான் ஒருபோதும் செயற்படமாட்டேனென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (22) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

’தேசிய ரீதியான போராட்டத்துக்கு வடக்கின் ஆதரவும் வேண்டும்’

நாடு பூராகவும் அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவு வங்குவதாகத் தெரிவித்த இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன், அதேபோல் வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் குறித்த போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்

சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த நிலையில், உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி கோரி, இன்று (22) கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரையோகத்தைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.