தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து 650 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த தேயிலையின் அளவில் 10 சதவீத அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 137 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி முன்னெடுத்திருந்த ஆய்வின் பிரகாரம், 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஜுன் மாத தேயிலை ஏற்றுமதியினால் அதிகளவு ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த ஏற்றுமதி பெறுமதியை ஜுன் மாதத்தில் பதிவு செய்திருந்தது.