15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (30) தெரிவித்தார்.
‘பேர்ள் தீயால் 200 உயிரினங்கள் மரணம்’
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியெறிந்தமை மற்றும் அதிலிருந்து வெளியேறி எண்ணெய் இரசாயன திரவங்களால், கடல்வாழ் உயிரினங்கள் 200 மரணமடைந்துள்ளன என சட்டமா அதிபர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். கப்பலில் ஏற்பட்ட தீயை அடுத்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 176 ஆமைகள், 4 திமிங்கலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இதுவரையிலும் மரணமடைந்துள்ளன.
இலங்கை: கொரனா செய்திகள்
மத்தியக் கிழக்கு பயணிகளுக்கான தடை நீக்கம்
மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. “கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கே நிபந்தனைகளுடனான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். இந்த அனுமதி இன்று (30) முதல் வழங்கப்பட்டுள்ளது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மீண்டும் மலரும் ஜனநாயகம்: நிரந்தர அமைதிக்கு வித்திடட்டும்
ஜம்மு மற்றும் காஷ்மீரில், நடைமுறையில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு கொண்டிருக்கும் அக்கறையை காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமரின் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.
மெகெல்லேயில் திக்ரேயின் முன்னாள் ஆட்சியாளர்கள்
எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை மீண்டும் கட்டுப்படுத்துவதாக அப்பிராந்தியத்தின் முன்னாள் ஆட்சியாளர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ எட்டு மாத மோதல்களின் பின்னரே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தமொன்றை குறித்த ஆட்சியாளர்களை வெளியேற்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை: கொரனா செய்திகள்
முன்னாள் யாழ் மாநகர மேயர் துரையப்பா
அரசியலமைப்பு அதிகாரங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதன் மூலமே சுபிட்சத்தை எட்டமுடியும் – கலாநிதி எம் பி ரவிச்சந்திரா
மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆசிரியர்களை வழிப்படுத்தும் கல்வியாளர்கள் மத்தியிலும் இலங்கை சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இணைந்த சேவைகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் இச்சிறப்பு நிகழ்த்துவதில் உவகை அடைகிறேன்.
நவ தாராளவாத அரசியல் பொருளாதார தோல்வி: அடுத்த நகர்வு என்ன?
(வி.சிவலிங்கம்)
உலகம் முழுவதையும் கோவிட்-19 நோய் உலுக்கி வரும் நிலையில் உலக திறந்த சந்தைப் பொருளாதாரமும் இறுகிப் போயுள்ளது. உலகிலுள்ள அரசுகள் பல தமது பொருளாதாரத்தை எவ்வாறு இயக்குவது? என்பதில் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளன. முதலாளித்துவ நாடுகள் பல தமது சேமிப்பின் பெரும்பகுதியை தத்தமது பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் தடுக்கும் தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால் சேமிப்பு அற்று ஏற்றுமதி வருமானத்தில் தங்கியிருந்த இலங்கை போன்ற நாடுகள் கடன்களுக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.