மெகெல்லேயில் திக்ரேயின் முன்னாள் ஆட்சியாளர்கள்

எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை மீண்டும் கட்டுப்படுத்துவதாக அப்பிராந்தியத்தின் முன்னாள் ஆட்சியாளர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ எட்டு மாத மோதல்களின் பின்னரே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தமொன்றை குறித்த ஆட்சியாளர்களை வெளியேற்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.