மனச்சாட்சித் தமிழர்களும் சோம்பேறித் தமிழர்களும்…..

(வேதநாயகம் தபேந்திரன்)

போர் தந்த புலம் பெயர்வால் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சில கிராமங்களின் தெருக்கள் முற்றாகவே புலம் பெயர்ந்துள்ளன.
பல நாடுகளில் ஓர் குறிப்பிட்ட பிரதேசம் குறித்த ஊரை அடையாளப்படுத்துவதாக உள்ளன. இழப்புகளும் இறப்புகளும் ஆரம்பித்த கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர்.

அழியாத கோலங்கள் -2.’ பற்றிய விகடனின் பார்வையில் கூறப்படும் குறைகள் சிலவற்றை தாண்டியும்

“பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டப்படுவதும், கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது, அற்புதமாக இருக்கிறது…”

விகடனின் பார்வை…..

தன் எழுத்துக்குக் காரணமான நாயகியை 24 ஆண்டுகளுக்குப் பிறகு காணச் செல்லும் எழுத்தாளருக்கு நேரும் சம்பவங்களின் குவியல்தான் இந்த ‘அழியாத கோலங்கள் -2.’

தான் எழுதிய நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் கௌரிசங்கர், சென்னையில் உள்ள தன் கல்லூரிக் காலத்துக் காதலி மோகனாவைப் பார்க்கச் செல்கிறார். இருவருக்குள்ளும் பேச ஆயிரம் கதைகளும், 24 மணி நேரமும் இருக்கின்றன. ஆனால், அன்றிரவு நடக்கும் ஓர் அசம்பாவிதத்தால் மோகனா இந்தச் சமூகத்தால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறாள். மோகனாவை அச்சூழலிலிருந்து யார் மீட்டெடுக்கிறார்கள் என்பதைக் கவித்துவமாக வரைகிறது இந்த அழியாத கோலங்கள்.

எழுத்தாளர் கௌரிசங்கராக பிரகாஷ்ராஜ். நெற்றி வியர்வை உணர்த்தும் சமிக்ஞையிலிருந்து, படுக்கையில் வீழ்வது வரை மனிதர் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார். கௌரிசங்கரின் மனைவி சீதாவாக ரேவதி, கணவருக்காகவே வாழும் கதாபாத்திரம். முதல் காட்சியிலிருந்து இறுதிவரை படத்தைத் தாங்கி நிற்கும் மோகனா கதாபாத்திரத்தில் அர்ச்சனா. எல்லாம் முடிந்து வாழ்வின் விளம்பில் எந்த சுவாரஸ்யமுமின்றிக் காத்திருக்கும் ஒருவருக்கு, தான் எல்லாமுமாய் நேசித்த ஒருவரின் வருகை எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அதை அப்படியே திரையில் கடத்துகிறார் அர்ச்சனா. சில இடங்களில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பை அர்ச்சனா குறைத்திருக்கலாம். போலீஸ் அதிகாரியாக நாசர். கச்சிதமாக நடித்திருக்கிறார்.

பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டியதற்கு இயக்குநர் எம்.ஆர். பாரதிக்கு வாழ்த்துகள். கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது.

வங்க மொழியில் வெளியான சௌமிக் மித்ராவின் கதையை அழியாத கோலங்களாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர், ஆனால், அதில் கடக்க முடியாத பக்கங்களாய் அத்தனை லாஜிக் மீறல்கள். எட்டு மாடிக்கு ஓடிச் சென்று வாட்ச் மேனை எழுப்புவது முதல் கேமரா இல்லாமலேயே சுற்றிக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் வரை அத்தனை செயற்கைகள். ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவோ, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்போ படத்துக்கு எந்தவிதத்திலும் துணைநிற்கவில்லை. படத்தின் பெரும்பகுதியைக் காப்பாற்றுவது அனுபவமிக்க நடிகர்கள்தாம். மற்றவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ஏதோ மேடை நாடகம் போல் திரைமொழியற்று ஏமாற்றமளிக்கின்றன.

ஓர் ஆத்மார்த்தமான கதையை இன்னும் சிரத்தையோடு எடுத்திருந்தால், என்றென்றைக்கும் அழியாத கோலங்களாய் நிலைத்திருக்கும்.!

தமிழர்சமூகஐனநாயகக்கட்சியின் (SDPT) தோழமை தினம்

திருகோணமலை மூதூர் கங்குவேலியில் தமிழர்சமூகஐனநாயகக்கட்சியின் (SDPT) தோழமை தினம், இலவச கண் ப‌ரிசோதனை முகாம்நடைபெற்று இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கபட்டது,

திருகோணமலையில் தோழமை தினம்

திருகோணமலை தோழர்களினால் மூதூர் முத்துச்சேனை R.D.S கட்டடத்தில் தோழமை தினம் நடத்தப்பட்டது.
தோழர் பத்மநாபா 30 வருடங்களுக்கு முன் தீர்க்க தரிசனமாக எடுத்த முடிவின் அமைவாக 13வது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு வடகிழக்கு மாகாண அரசு அமைக்கப்பட்டது. தொடர்ந்து அது இயங்குவதற்கு தமிழ் தலைவர்கள் யாவரும் ஏற்று கொள்ளாததன் விளைவு குறுகிய காலத்தில் மாகாண அரசு சிதைக்கப்பட்டு விட்டன. அன்று மறுத்த தலைவர்களும் 13வது திருத்த சட்டத்தை இன்று உள்ள தலைவர்களும் அமுல்படுத்துமாறு போராட்ட வீரர்கள் போல் மாயை காட்டுகிறார்கள். இலகுவாக கிடைத்ததை போட்டு உடைத்துவிட்டு ஒட்டுவதற்கு பாடு படுவதாக பாசாங்கு செய்கின்றனர். இவை யாவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து நினைவு கூறப்பட்டது .

“தமிழ்த் தேசியக் கட்சி” உதயம்

“தமிழ்த் தேசியக் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியொன்றை, இன்று (15) அங்குரார்ப்பணம் செய்துவைத்த, தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சிகள் பல இணைந்து, புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாற்றுத்தலைமையை உருவாக்கவுள்ளோம் என சூளுரைத்தார்.

தமிழகத்தில் தமிழ் தேசியம்

(பாவல் சங்கர்)

//இங்கே தமிழர் தேசிய அரசியல் மூன்று விதமான நபர்களால் மூன்று விதமான காரணங்களுக்காக பேசப்பட்டு வருகிறதை பார்க்க முடிகிறது……….??

காற்றாலைகள்

(வடகோவை வரதராஜன், மோகன் சிவராஜ)

அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் .

மோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

மண் மீட்பு……?

(சாகரன்)

அண்மையில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபாய ராஜபக்ஸ அரசு ஒரு கட்டுப்பாட்டுத் தளர்த்தல் அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அது இனிவரும் காலங்களில் கட்டுப்பாடற்ற முறையில் மணல் அள்ளலாம் என்பதே அது. கட்டுப்பாடுகள் இருந்த போதே தமது மணல் அள்ளலை ‘வெற்றிகரமாக’ செயற்படுத்தி வந்த ‘டிப்பர்’கள் தற்போது ஒரு நாளில் சில இடங்களில் 350 இற்கு மேற்பட்ட அள்ளல்களை மேற்கொள்கின்றனர்.