திருகோணமலையில் தோழமை தினம்

திருகோணமலை தோழர்களினால் மூதூர் முத்துச்சேனை R.D.S கட்டடத்தில் தோழமை தினம் நடத்தப்பட்டது.
தோழர் பத்மநாபா 30 வருடங்களுக்கு முன் தீர்க்க தரிசனமாக எடுத்த முடிவின் அமைவாக 13வது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு வடகிழக்கு மாகாண அரசு அமைக்கப்பட்டது. தொடர்ந்து அது இயங்குவதற்கு தமிழ் தலைவர்கள் யாவரும் ஏற்று கொள்ளாததன் விளைவு குறுகிய காலத்தில் மாகாண அரசு சிதைக்கப்பட்டு விட்டன. அன்று மறுத்த தலைவர்களும் 13வது திருத்த சட்டத்தை இன்று உள்ள தலைவர்களும் அமுல்படுத்துமாறு போராட்ட வீரர்கள் போல் மாயை காட்டுகிறார்கள். இலகுவாக கிடைத்ததை போட்டு உடைத்துவிட்டு ஒட்டுவதற்கு பாடு படுவதாக பாசாங்கு செய்கின்றனர். இவை யாவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து நினைவு கூறப்பட்டது .