தமிழகத்தில் தமிழ் தேசியம்

முதல் வகையினர் தமிழ் மொழி இன உணர்வு கொண்டவர்கள்.
இவர்களே பெரும்பான்மையாக தமிழ்த்தேசியம் பேசி வருகிறார்கள்.

இவர்களது நோக்கம் அப்பழுக்கற்றது……..!!

யாராவது முன்னெடுத்து உண்மையான மாற்றங்கள் வந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் இவர்கள் தமிழ்த்தேசிய அரசியலை பேசிவருகின்றனர்.

துரதிஷ்டவசமாக இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமலும்,
அதன் பின்னே இயக்கப்படும் சூழ்ச்சிகளை பற்றி எந்த புரிதலும் இல்லாதததாலும்,
தமிழர் என்று எவன் பேசினாலும் அப்பாவித்தனமாக ஏமாந்து விடுகின்றனர்.

தான் ஏமாற்றப்படும் வரை தாங்களே வெல்லப்போகும் அணியாக கற்பனையில் வாழும் இவர்கள்,
தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் தோல்வியில் துவன்டுப்போய் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு சென்றுவிடுவர்………!!

அதிகப்படியான தங்களது நேரத்தை பட்டிமன்ற கூட்டங்களிலேயே முடித்துக்கொண்டு,
அங்கு எவன் கூலி கொடுத்தாலும் அந்த கூலிக்கு மாராடிக்கும் வெற்று பேச்சாளர்களின் பேச்சுக்களை எல்லாம் நம்பி,
நாளையே தமிழ்த்தேசியம் அடைய போவதாக பகல் கனவுகளிலேயே இவர்களது காலம் முடிந்தே போய்விடுகிறது………..??

பெரும்பாலும் அப்பாவியான இவர்கள் மார்க்கெட்டிங் செய்யப்படும் போலிகளை கண்டு ஏமாந்தாலும்,
பெரிதும் ஆபத்தானவர்கள் அல்லர்……….!!

இரண்டாவது வகை தமிழ்த்தேசியம் பேசுபவர்கள்,
ஏதாவது எழுச்சி ஏற்படும் காலங்களில் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு அதன் மூலமாக தங்களை தலைவர்களாக உருவாக்கிகக்கொள்ள முடியுமா என்ற முயலும் அரைகுறைகள்………!!

இவர்களிடம் எந்த தத்துவ புரிதலும் இருக்காது என்பதோடு,
சமூக மாற்றத்திற்கான எந்த கேள்விகளுக்கும் எந்த பதிலும் இருக்காது……..!!

யாராவது இவர்களை பார்த்து கேள்வி கேட்டால் ஒன்று உளறுவார்கள் இல்லை என்றால் அவர்களிடம் நீங்கள் என் எதிரி கூட்டத்தை சேர்ந்தவரா என சண்டை பிடிப்பார்கள்…….??

மிகவும் சிறுபான்மையாவர்களான இவர்கள் பெரும்பாலும் வட்டச் செயலாளர் வண்டுமுருகன்களை போன்றவர்கள்…….!!

இவர்கள் அளவிற்கு சிலருடன் சேர்ந்து இங்கே நடக்கும் மாற்றங்களுக்கு எல்லாம் தாமே காரணம் என்பதாக பேசிக்கொண்டு எந்த செயல்பாடுகளும் அல்லாமல் மீன் கடையில் ஜாமீனை தேடிக்கொண்டிருப்பர்……….??

இவர்கள்,
நடக்கக்கூடிய சமூக மாற்றங்களை வளர்க்கவே அல்லது சதி செய்து தடுக்கவே இயலாத அப்பாவிகள் என்பதால்,
இவர்களை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை……..!!

மூன்றாவது வகையினர் காரியக்காரர்கள்…….!!

நடக்கக்கூடிய மாற்றங்களை கனித்து அதற்கேற்ப சுயநலமாக காய்நகர்த்தி தங்களை வளப்படுத்திக்கொள்ள கூடியவர்கள்………!!

இத்தகைய சுய நலவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள்………??
ஏனெனில்,
இவர்களை தான் எதிரிகள் எப்போதும் கையில் எடுப்பர்……..!!

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அடிமையாய் வாழும் மக்கள் புரட்சிகர கோஷத்துடன் கிளர்தெழும் போதெல்லாம் மேற்கண்ட சுயநலவாதிகளை கையில் எடுத்தே அதிகாரவர்க்கம் புரட்சியில் ஈடுபடும் அப்பாவி மக்களை திசை திருப்புவதோடு,
தேவைப்பட்டால் அடக்குமுறைகளை ஏவி அப்பாவி மக்களை அழிக்கவும் செய்யும்……….!!

அப்போதுவரை உங்களுக்கானவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இந்த காட்டிக்கொடுக்கும் சுயநலவாதிகள்,
தன் காட்டிக்கொடுக்கும் வேலை முடிந்தவுடன் அதற்காக பெற்ற எழும்புத் துண்டுகளை பெற்றுக்கொண்டு எதிரியின் காலடியில் வீழ்ந்து கிடக்கும்……….??

இன்றைய நிலையில்,
தமிழகத்தில் கடைசியாக சொன்ன இந்த சுயநல கூட்டமே இங்கே சத்தமாக தமிழ்த்தேசிய அரசியலை நீட்டி முழங்கி வருவதை அதிகமாக காண முடிகிறது………??

இந்திய உளவுத்துறையின் அஜென்டாவை தமிழன் என்ற பெயரில் தேன் தடவி உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது………..??

இதில் நான் மேற்சொன்ன பிரிவினைப்படி யார் யார் செயல்படுகிறார்கள் என கண்டுப்பிடித்து அதற்கேற்ப இராஜதந்திர காரியங்களை உண்மையான தமிழர் தேசிய சக்திகள் திட்டமிட்டு காய்நகர்த்தாவிட்டால்,

விரைவில்
அடுத்த முள்ளிவாய்க்காலாக தமிழகம் மாறப்போவதை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது…………???

(செல்வா பாண்டியர், தமிழர் நடுவம்)