உக்ரேன் ஜனாதிபதியின் அறிவிப்பால் உலக நாடுகள் சோகம்

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 20 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர்  செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  தெரிவித்துள்ளார்.  

ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு

கர்நாடகாவிலுள்ள உடுப்பி அரசு மகளிர் பல்கலைக்கழகத்தில், அண்மையில் ஆறு முஸ்லிம் மாணவிகள்  ஹிஜாப்  அணிந்து வகுப்பிற்கு வருகை தந்ததால் அம்மாணவிகளை அப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது.

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ?

ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதார தடை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

“கோட்டாவே வீட்டுக்குப் போ”

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பங்கேற்றிருப்பவர்கள்,GOTA GO HOME  (கோட்டாவே வீட்டுக்குப் போ) என எழுதப்பட்ட பட்டிகளை தலையில் அணிந்துள்ளனர். பெண்களைப் பொறுத்தவரையில், சாரிகளிலும் அந்த பதாகையை ​ஒட்டிக்கொண்டுள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் நாட்டை இழக்க நேரிடும் – ரணில்

நிலவும் நெருக்கடியை தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நிலவும் நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை என தெரிவித்தார்.

தேயிலை ஏற்றுமதி முழுமையாக இடைநிறுத்தம்

ரஷ்யா மற்றும் உக்ரேன் கிய இருநாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக, குறித்த இரண்டு நாடுகளுக்குமான தேயிலை ஏற்றுமதியை முற்றாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இருளர் சமூக பெண் மல்லிகா பேரூராட்சி தலைவராக பதவியேற்பு!

மாவட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை (04/03/2022) நடைபெற்றது.  இதில் கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி இருளர் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தேசிய அரசாங்கத்தால் பயனில்லை – ரணில்

தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபட தேசிய அரசாங்கங்களை அமைப்பதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரும் தேசிய இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிருலப்பனையில் நேற்று(13) பிற்பகல் நடைபெற்ற கட்சி மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இதனைக் கூறியுள்ளார்.

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு; விவரம் இதோ

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் பயணக் கட்டணம், 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஆகக்கூடிய பஸ் கட்டணம் 1,498 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டச் செயலகம் முன் ஈ.பி.டி.பி போராட்டம்

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி) இன்று (14) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.