மாலை 4:30முதல் காலை 8.30 வரை விமானங்கள் பறக்கும்

கட்டுநாயக்க, பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய ஓடுபாதையின் திருத்தப் பணிகள், ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை 28 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான பயணங்கள், மாலை 4.30இல் இருந்து அடுத்த நாள் காலை 8.30 வரை இடம்பெறவுள்ளது. உள்நாட்டு விமான பயணங்கள் இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இடம்பெறும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

(“மாலை 4:30முதல் காலை 8.30 வரை விமானங்கள் பறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

மோடியும், டாக்ஸி ட்ரைவரும்

நேற்று உயிர்மை பதிப்பக விழாவிற்காகச் சென்னைக்குப் போயிருந்தேன். மதிய நேரம் என் மகள் வீட்டுக்குப் போய்விட்டு, மாம்பலத்தில் உள்ள லாட்ஜுக்குத் திரும்பிட, ஊபர் கேப்ஸ் மூலம் கார் பதிவு செய்தேன். வந்த காரில் ஏறினேன். 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் என்னிடம் சொன்னார். ‘’ சார் தயவுசெய்து Paytime-இல் புக் பண்ணாதீங்க. எல்லாரும் அப்படித்தான் செய்யுறாங்க. வண்டிக்குப் பெட்ரோல் போடணும் . தயவுசெய்து பணமாகத் தாங்க” என்று கெஞ்சினார்.

(“மோடியும், டாக்ஸி ட்ரைவரும்” தொடர்ந்து வாசிக்க…)

அரசும்….! மதமும்….!!

கிறிஸ்தவக் கன்னியர் மடத்தில்தான் ஆரம்பம் முதல் படித்தேன்.. அந்த நாட்களில் ஓரிருவரைத் தவிர எல்லாக் கன்னியாஸ்திரிகளுமே மதவெறி ..சாதிவெறி…பணக்காரப்பிள்ளைகள் மீது மோகம் என்பவற்றில் மூழ்கியிருந்தார்கள்..இவர்களோடும் போராடித்தான் என் படிப்புக்காலம் கழிந்தது. என் போராட்டக் குணம் அவர்களுக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை..கூடிக்கூடி என்னைப்பற்றியே பேசினார்கள் …பலவிதத்தில் என்னை இம்சையும் செய்தார்கள்.. நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் தொடர்ந்து அவர்களோடு படிக்க முடிந்தது.

(“அரசும்….! மதமும்….!!” தொடர்ந்து வாசிக்க…)

இரு ஆளுமைகள்… சில நினைவலைகள்!

(சசிகுமார்)

தமிழ்நாட்டின் வடக்குக் கடலோரப் பகுதியில் சமீபத்தில் வீசிய ‘வார்தா’ புயல், ‘எனக்குப் பிறகு பெரிய பிரளயம்தான்’ என்ற பழமொழியை நினைவுபடுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுடன் அதை ஒப்பிடத் தோன்றியது. தமிழக அரசியல் இப்போது புதிய சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.

(“இரு ஆளுமைகள்… சில நினைவலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்

இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்;டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது. சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் மேய்ப்பர்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கிபிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது.

(“தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்” தொடர்ந்து வாசிக்க…)

அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன.

(“அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை” தொடர்ந்து வாசிக்க…)

அய்யாத்துரை! அப்புகாமி! அபூபக்கர்! அந்தோனி! தீர்வு எப்போது?

விஜயன் வரவுக்கு முன்பு இலங்கை தீவின் மூத்தகுடிகள், யக்கர் நாகர் என வரலாறு கூறிப்பிடும் அதேவேளை, யாழ்பாடி வெகுமதியாய் பெற்ற வட பகுதியில் வாழ்ந்தவர், தமிழர்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், அங்கு அய்யாத்துரை முதன்மை பெறுகிறார். பின் தெற்கில் விஜயன் கரை ஒதுங்கி குவேனியை கரம் பற்றி உருவான, சிங்கள இனத்தில் அப்புகாமி உதயமானார், கடல் வணிகம் செய்து வந்த அரேபியர், காலி துறைமுகத்தில் கரை ஒதுங்கியதும், அவர்கள் வழிவந்த அபூபக்கர் தன் காலடி பதித்தார். நாடு பிடிக்க அலைந்த போத்துகீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் வரவின் பின் மதம் மாறியவர் சூசை, அல்பேட், அந்தோனி ஆகினர்.

(“அய்யாத்துரை! அப்புகாமி! அபூபக்கர்! அந்தோனி! தீர்வு எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

“சுதந்திர இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் கீழ்வெண்மணி”

இப்படி ஒரு அநாகரிகமான சமூகத்தில் வாழ்கிறோம் என நினைக்கும் போதொல்லாம் நெஞ்சம் பதறுகிறது, அந்த ஆற்றொணா துயரை எப்படி மறக்கமுடியும் சாணிப்பாலையும் அந்த சவுக்கடியையும் அரைப்படி அரிசி அதிகம் கேட்டவன் மீது நிகழ்திய கோரத்தையும் கருகிய முத்துக்களையும், அன்றே மாண்டுவிட்டது மனித நேயம் .டிசம்பர் 25.

“கீழ்வெண்மணி”

(டிசம்பர் 25 , 1968)
வர்க்கப் புரட்சியின் அடையாளம்
சொந்த நிலத்தையும்
சொந்த நலத்தையும்
ஆண்டைகளிடம் பறிகொடுத்தது …

(““கீழ்வெண்மணி”” தொடர்ந்து வாசிக்க…)

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?

(1968 டிசம்பர் – 1980. டிசம்பர் வரை)

“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ்,
´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

(“கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)