உரிமை பற்றி கதைக்கின்ற சம நேரத்தில் அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்வதுதான் முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம்!

– சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி
முஸ்லிம் மக்கள் வாழ தெரிந்தவர்கள், அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்கள் விவேகமானவை, அவர்களின் உரிமைகளை பற்றி கதைத்து கொள்கின்ற சம நேரத்திலேயே அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்தும் வருகின்றார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச முன்னாள் உப தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

(“உரிமை பற்றி கதைக்கின்ற சம நேரத்தில் அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்வதுதான் முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம்!” தொடர்ந்து வாசிக்க…)

படைவீரர்களுக்கான பொது மன்னிப்புக் காலம்

தப்பியோடிய படைவீரர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இது குறித்துப் பேசிய இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன, “இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கான புதிய பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள், சட்ட ரீதியாகத் தம்மை இராணுவத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும்

பொய்மைகளாலும் புரட்டுக்களாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் பாராளுமன்ற அரசியல் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும்

எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி பெறும் தகைமையில்லாதோரெல்லாம் முகநூலில் சொட்டைப் பதிவுகளிட்டு ஆய்வாளர்களாகிப் போன துன்பியற் சூழலில் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே எடுத்துச் சொல்ல வேண்டியது வரலாற்றுக் கடமை என்றாற் போலாகிவிட்டது. அஃதில்லையெனில் புரட்சிகர சக்திகளாக அணியமாக வேண்டிய தமிழ் இளையோர்கள் பாராளுமன்ற அரசியற் பித்தலாட்டக்காரர்களுக்கான ஓட்டுப் பொறுக்கிகளாக அலையும் துயரத்தை மாற்றியமைக்க வழியிராது. பாராளுமன்ற அரசியலின் கையாலாகாத்தன்மையைக் குறிப்பிட்ட ஒரு கட்சியின் இரண்டகமாகக் கதையளப்பவர்கள், தாம் அவ்வழி நின்று எதுவெல்லாம் செய்வோமெனக் கூற அதையே நம்பி ஏமாறும் இளவட்டங்களும் அரசியல் வரட்சியில் உலவித் திரியும் ஒரு சில முதியோரும் இனியும் ஏமாறாதிருக்க 6 ஆம் திருத்தச் சட்டத்தை அவர்கள் கூடுமிடங்களில் பேசு பொருளாக்கியே தீர வேண்டுமென்றெண்ணி அது குறித்துத் தொட்டுச் சென்று அரசியற் தெளிவூட்டுவதை இப்பத்தி முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.

(“பொய்மைகளாலும் புரட்டுக்களாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் பாராளுமன்ற அரசியல் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !

ஆனால் முஸ்லிம்களைப் பொருத்தவரை வடக்கிலும் கிழக்கிலும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபை ஒன்றை நிறுவுவதோ அல்லது நிர்வகிப்பதோ நடைமுறையில் மிகுந்த சவாலான விடயமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் தெற்கிலே சிங்கள சமூகத்துடன் வாழும் நிலையில் தமிழர் தரப்பினரின் தாயக் கோட்பாட்டை , சுய நிர்ணயக் கோட்பாட்டை அடியொற்றி முஸ்லிம் “தாயக “, “தன்னாட்சி” கோட்பாடுகளைக் கொண்டு சுயாட்சி அலகு கோருவதென்பது நடைமுறையில் சாத்தியமானதா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

(“வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் தரப்புடன் இணைந்து தனித்தே போட்டியிடும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில்இ தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூட்டுசேர்ந்து போட்டியிடாது. தமிழர் தரப்புடன் இணைந்து தனித்தே போட்டியிடும்எ ன்று முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தரைவருமான கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எமது கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது. ஆனால் தேசிய ரீதியிலான தேர்தல்களில் மஹிந்த அணிக்கே எமது கட்சி நிச்சியம் ஆதரவு வழங்கும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைஇ புதனகிழமை சந்தித்து இது தொடர்பான எமது இறுதி முடிவை அறிவித்துள்ளோம் என்றார்.

புகையிரத சேவையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

புகையிரத சாரதிகள், புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக புகையிரத லோகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியவாறு 300 ரூபா சம்பளக் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென்று புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன கூறினார். இம்மாத சம்பளம் இருந்ததைவிட குறைவடைந்துள்ளதாகவும், பிரதமரின் செயலாளருடைய உத்தரவு நிறைவேற்றாத காரணத்தாலும் இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது

பொருட்களின் விலை குறைப்பு

வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.இதன் கீழ் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஒருகிலோ வெள்ளைப்பச்சரிசி 65 ரூபாவிற்கும்இ ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு சதொசவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.அரிசியை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியின் செயலாளர் தலைமையிலான கேள்விப்பத்திர குழுவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்ததுடன் மேலும் இம்மாதத்தில் மேலும் 30 சதொச கிளைகள் திறக்கப்படவுள்ளது

4 கட்சிகள் இணைவு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் மேலும் 4 கட்சிகள் இணைந்துள்ளன. இதன்பிரகாரம், முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையின் கீழ் இயங்கும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இதில் அடங்கும்.

(“4 கட்சிகள் இணைவு” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

(“மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தோனேசிய அகதி முகாமில் இருக்கும் தமிழ் மக்களுக்கான பணிவான வேண்டுகோள்.

(இந்தப் பதிவு சம்மந்தமாக மேலதிக் செய்திகளை எமது இணையம் எதிர்பார்கின்றது இந்தச் செய்திக்கு இதனை எழுதியவரே பொறுப்பு)

நீங்கள் உயிர்காப்புக்காகவே புலம் பெயர்ந்தீர்கள் இப்போது இலங்கையில் நல்லாட்சி நடக்கின்றது ஆளும் கட்சி சிங்களக் கட்சியாகவும் எதிர்க் கட்சி தமிழ் கட்சியாகவும் இருக்கின்றது எனவே இலங்கையில் தமிழர்களுக்கு உயிர்ப்பயமோ அல்லது உயிர் ஆபத்தோ இல்லை என்று இலங்கை அதிபர் இந்தோனேசிய அரசுடன் இருதரப்பு உடன்படிக்கயில் கைச்சாத்திட்டுள்ளார்.

(“இந்தோனேசிய அகதி முகாமில் இருக்கும் தமிழ் மக்களுக்கான பணிவான வேண்டுகோள்.” தொடர்ந்து வாசிக்க…)