தமிழர் தரப்புடன் இணைந்து தனித்தே போட்டியிடும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில்இ தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூட்டுசேர்ந்து போட்டியிடாது. தமிழர் தரப்புடன் இணைந்து தனித்தே போட்டியிடும்எ ன்று முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தரைவருமான கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எமது கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது. ஆனால் தேசிய ரீதியிலான தேர்தல்களில் மஹிந்த அணிக்கே எமது கட்சி நிச்சியம் ஆதரவு வழங்கும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைஇ புதனகிழமை சந்தித்து இது தொடர்பான எமது இறுதி முடிவை அறிவித்துள்ளோம் என்றார்.